Friday, 22 July 2016

Shri Mathurakali of Siruvachur is a very famous Deity, who has given Darshan to Adhi Shankara after quenching his thirst while he was passing through Madira Malai, now known as Periyaswami Malai.  Ambal is the Poorvashrama Kula Deivam of  Shri Kanchi Mahan Maha Periyava HH Chrandarasekarendra Saraswati of Shri Mutt, Kanchi.  To be precise, She is a very powerful Deity and has blessed many including one of the Chola Kings, who was blessed with a child.  Shri Bothendra Swamigal has consecrated the Shri Chakra in the Sanctum, who is a staunch devotee of Ambal.  On HER wishes and instructions, I have been writing some material to convey to the Devotees, so that they could go through and enlighten themselves.  Om Shri Siruvakshyai Namaha Om Siruvachur Vaasinyai Namaha.    Balasubramanian NR

91 comments:

  1. எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது! எங்கும் ஒளிரும்
    நிறைந்ததுமாக காண்கிறேன். சொப்பனத்தில் காணும் ஜோதி உறுதிப்படுத்தும் தன்மையது. சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று நாம் யாவருக்கும் இருப்பிடம் அவளுடய ஸஹாயம்.

    ReplyDelete
  2. பக்தியின் பிடியில் மகான்களின் பார்வை விசேஷம். நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவளுக்குத் தான் உண்டு. மனசுல படறதை இருகரம் கூப்பி கேக்கணும். ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பாள். பதில் சொல்லுவாள். அனுக்ரகம் செய்வாள்.தெய்வ பக்தி நிச்சயம் சாதிக்கும்.

    ReplyDelete
  3. ஸ்ரீமதுரகாளி ஒளியால் இந்த உலகம் பிரகாசிக்கிறது, காக்கப்படுகிறது. ஆச்சர்யமான ரூபத்துடன் விளங்குகின்ராள். பழைமை வாய்ந்த கோவில். இந்த அம்பாளை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பாளை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 51- சக்தி பீடங்களில் இது ஒன்று. சாறுகன் என்ற அரக்கன் துவம்சம் செய்து தொந்தரவு தாங்க முடியாமல் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவபெருமான் பொருத்தறுளுங்கள் விடிவு பிறக்கும் என்கிறார். அதன்படி மாயசக்தி அம்பாளை உருவாக்கினார். ஆதிசங்கரர் தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். அவர் பயணம் மேற்கொள்ளும் போது மதிரமலையின் மீது தியானம் மேற்கொள்கிறார். தியானத்தின் பலனாய், களைப்பின் போது, நீரோடையை உருவாக்கி, அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும்போது அம்பாளை வணங்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார். மூலிகை கலந்த நீர். அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்தயிடத்திலேயே அம்பாளை பிரஷ்டை செய்கிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்கிறார். ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அம்பாள் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். காணக்கிடைக்காத உருவம். பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும். தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வெள்ளிக்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் அம்பாள் கோயில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார வலா வருகிறாள்.
    புண்ய காலங்கள், அநுஷ்டிக்கப்பட்டு வந்திருப்பவை, எவ்வளவோ இருக்கின்றன. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. கண நேரம் நினைத்தாலும் அன்னை வருவாள். சிரம் தாழ்த்தும் அடியவரை அடி சேர்க்கும் அன்னையவள் கரம் கூப்பிக் கும்பிடுவோர் குறை தீர்க்கும் அன்னையவள் மனமதிலே
    ஸ்ரீ மதுரகாளியை ஏற்றிவிட மனமிறங்கும் தாயவள் தினம் வேண்டித் தொழுவோர்க்கு துணையாகும் தாயவள் சிலர் அன்னையைத் தவிரக் வேறு கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள். அவள் தான் எங்கள் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு அழைத்து தினம் அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள். அவள் மாதிரி தெய்வங்கள் இல்லை மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் உண்டு மற்றவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் ஸ்ரீ மதுரகாளி தாயை விட உசத்தி என்றால் எப்படி எனக்கென்ன தோன்றுகின்றதென்றால் தாயே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். நாக்கிலேதான் அவள் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அன்னையை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவளோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம். பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம்
    பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் சக்தி இருக்கிறது
    அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை
    நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம். கஷ்டமே இல்லை. பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும். இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே. வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான். இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்து விடும். நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் அன்னையை வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.அதனால் எப்பொழு தெப்பொழுது முடிந்தாலும் ஸ்ரீ மதுராம்பிகா என்று அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் மங்களம் தழைக்கச் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. போதாது ஒன்றும் போதாது ஸ்ரீமதுரகாளியின் பெருமை சொல்ல வார்த்தை ஒன்றம் போதாது பலகோடி பக்தர்களைக் கொண்டவள் அவள் நம் துயர் துடைக்க ஓடி வந்து அருள்பவள் தடையின்றி அருளைத் தரும் தாய் அவள் மனம் ஏறி வழி நடத்திச் செல்பவள்
    தினம் வேண்டுபவர் குறை தீர்த்து நின்றவள் மண்ணகத்து மாந்தர் துணையானவள் பக்தர்கள் போற்றும் கடவுளென ஆனவள் அவளின் பெருமையை சொல்ல வார்த்தை ஒன்றும் போதாது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா தருவாயே உன்னருளை

    ReplyDelete
  6. போதாது ஒன்றும் போதாது ஸ்ரீமதுரகாளியின் பெருமை சொல்ல வார்த்தை ஒன்றம் போதாது பலகோடி பக்தர்களைக் கொண்டவள் அவள் நம் துயர் துடைக்க ஓடி வந்து அருள்பவள் தடையின்றி அருளைத் தரும் தாய் அவள் மனம் ஏறி வழி நடத்திச் செல்பவள்
    தினம் வேண்டுபவர் குறை தீர்த்து நின்றவள் மண்ணகத்து மாந்தர் துணையானவள் பக்தர்கள் போற்றும் கடவுளென ஆனவள் அவளின் பெருமையை சொல்ல வார்த்தை ஒன்றும் போதாது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா தருவாயே உன்னருளை

    ReplyDelete
  7. உருகிடும் பக்தர்களின் மனதிலே உன் அருளாசி கண்ணிற்கு ஒரு இமைபோல காக்கும் எங்கள் தெய்வமே கலியுகத்தில் வாழும் தெய்வமே குல தெய்வமே கண் கண்ட தெய்வமே காணும் பக்தர் யாவரும் கண்களில் நீர் சோர கசிந்து உருகும் தோற்றமே
    கண்டோர் உன்னை பலருண்டு கலங்கி தவிப்பதில் நானுமுண்டு
    கலக்கத்தைப் போக்கி அருள்வாய் கவர்ந்திழுத்திடுவாய்
    உருகிடும் பக்தர்களின் மனதிலே உ ன் அருளாசி பல உண்டு
    உம் திரு உருவையே உளமாற நினைத்திட அனைவருக்கும் தளராத மனம் தந்திடு தாயே ஸ்ரீ காஞ்சீ குரு சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியின் குலதெய்வமே உனைச் சரண் அடைந்திடவே முழுவதும் காத்திடுவாய் முற்பிறப்பும் அறிந்த தெய்வமே உம் திரு உருவையே உளமாற நினைத்திட அருள் மழையை பொழிவாயே வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் உன் சூலத்தால்
    முழு பரம் பொருளாய் உனைச் சரண் அடைந்திடவேனே
    கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
    கற்பகத் தருவே போற்றி காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
    உன் காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று உன் நாமம் சொல்லவே தித்திக்கும் வாழ்கையை தந்திடுவாய் தாயே
    சூலம் ஏந்திய தெய்வமே வருவாய் மலர்வாய் நித்தம் நித்தம் உன்னை நினைத்துருக வேண்டி காலமெல்லாம் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும் அனுதினமும் அருளாசி என் மன கண்ணில் நின் தயவால் வழிந்திடும் தாயின் ஆசி
    குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்

    ReplyDelete
  8. உன்னை எண்ணி நாளும் போற்றுகின்ற உள்ளங்களில் வாழும் தாயே கண் திறந்து பார்த்து அவர் தம் கவலை எல்லாம் போக்கி, வறுமை நீங்கி வளமுடன் உயர்ந்த வாழ்வு தந்து காப்பாயே.

    ReplyDelete
  9. அன்னையின் சந்நிதியில் வேண்டிக் கேட்டாலே பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட நாளடைவில் வேகமாகவும், முழுமையாகவும், போய்விடும். அத்தோடு தீயசக்திகளும் வெளியேறிவிடும். நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, அவளை அடைய வேண்டும் என்ற தணியாத ஆர்வமும், தீவிரமான மனநிலையும் தேவை. ஒவ்வொரு நாளும் நல்ல சிந்தனைகளை நடைமுறைப் படுத்த முயல வேண்டும்.திருமாங்கல்யம் செய்து வந்து அன்னை ஸ்ரீ மதுரகாளிக்கு கொடுக்கலாம். தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். சிரத்தையோடு செய்வது நம் முயற்சிக்கு பலன் கிடைக்கும். அவளைப் பார்ப்பதற்கும் அவளது கருணையால் அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ! பக்தரின் மனதில் தெளிவு பிறக்கும். காணக்காணப் புண்ணியம். அவளின் அருள் நம்மைக் காத்திடுமே!. தாய் பாதமே பணிந்து உயர்வோமே!!

    ReplyDelete
  10. அன்னையின் சந்நிதியில் வேண்டிக் கேட்டாலே பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட நாளடைவில் வேகமாகவும், முழுமையாகவும், போய்விடும். அத்தோடு தீயசக்திகளும் வெளியேறிவிடும். நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, அவளை அடைய வேண்டும் என்ற தணியாத ஆர்வமும், தீவிரமான மனநிலையும் தேவை. ஒவ்வொரு நாளும் நல்ல சிந்தனைகளை நடைமுறைப் படுத்த முயல வேண்டும்.திருமாங்கல்யம் செய்து வந்து அன்னை ஸ்ரீ மதுரகாளிக்கு கொடுக்கலாம். தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். சிரத்தையோடு செய்வது நம் முயற்சிக்கு பலன் கிடைக்கும். அவளைப் பார்ப்பதற்கும் அவளது கருணையால் அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ! பக்தரின் மனதில் தெளிவு பிறக்கும். காணக்காணப் புண்ணியம். அவளின் அருள் நம்மைக் காத்திடுமே!. தாய் பாதமே பணிந்து உயர்வோமே!!

    ReplyDelete
  11. கலியுக அவதாரமாக நம்மிடையே விளங்கி வருகின்ற ஸ்ரீ மதுரகாளி, ஸ்ரீ ஆதி சங்கரரின் இதயத்தில் திருவிளையாடினவள்.
    அவரிடம் அலாதி வாஞ்சை. அவதாரம் வந்தால்தான் ஸரியாயிருக்கும் என்று நினைத்தாறோ!! சிறுவாச்சூர் சென்று ஸ்ரீமதுரகாளியம்மனை ஐந்தடி உயரத்தில் தரிசித்தவர். பக்தர்களுக்கு/பூக்காரருக்கு தெரிந்த விஷயம். விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மாலைகளை மகா பெரியவா ஆசைப்பட ஒரு முறை சாத்தினார்கள் என்று சொல்வதுண்டு. பக்தர் ஒருவர், நம்பிக்கையின் உச்சம், கஷ்டம் இல்லாமலிருக்க வேண்டுமானால், ஒரு அபகாரமும் வரமாலிருக்க அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை, அம்மாவை பக்தியுடன் தரிசனம் செய்து வேலையை ஆரம்பிக்கப் போறோம் என்றார். தெய்வத்தால் ஆகாதது எது!! ப்ரத்யக்ஷம் கண்ணெதிரே உயிர்ப் பிச்சை வேண்டி வழங்கினாள். எல்லா ஜீவனுக்கும் உரிமையுண்டு. ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தையெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. ஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது. கேளாமலே அனைத்தையும் கொடுப்பவள். இன்புற்று வாழ அவளை அறிதல் வேண்டும். அம்பாளின் நாமத்தை அனுதினமும் பாராயணம் செய்வோம்.

    ReplyDelete
  12. இந்த பிறவியிலேயே பக்தர்கள் அம்மாவை அடைந்து இணையும் முக்தி அருள்பாலித்துவருகிறாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி அபிஷேக விபூதி மணக்கும். நுழையும்போதே பக்தர்களுக்கு அன்னை ஸ்ரீ மதுரகாளியின் தேஜஸ் அருள் பார்வை படும்படி சன்னிதி அமைந்துள்ளது. ஒரு பிரதட்சிணம் செய்து மீண்டும் சன்னிதி சென்றால் கண்ணின் மணிகளுக்கு, இந்திரியங்களுக்கு ஒளி, தரும் சக்தி பெற்றவள். சன்னிதியில் கூட்டம் அலைமோதுகிறது. சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம், க்ஷேத்திர பூஜைகளும் உத்சவ பண்டிகைகளும் திருவிழாக்களும் ஆகம நெறிகளின்படி விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அம்பாளின் நாமத்தை கவனத்துடனும், வைராக்யத்துடனும், மனஸ் எப்படியோ அப்படிப் பண்ணட்டும் என்றில்லாமல், செய்ய வேண்டும். நாமத்தின் மகிமை புரியும். லட்சியத்தை மேற்கொள்ளவேண்டும். அவளுடைய மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, இனிமையாக அமைய வரும் சந்தோஷத்தை/ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது!! பக்த ஜனங்கள் கொண்டாடுகிறார்கள். தீர்க்காயுஸுடன் இருப்பார்கள். தாயும் தந்தையாய் வந்து ஞானத்தை தந்து நினைத்தது நடக்கும். ஆலயம் வாருங்களேன், அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை தரிசனம் பாருங்களேன்.

    ReplyDelete
  13. 1920ஆம் ஆண்டுக்கு முன்பு சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மனுக்கு அர்ச்சகராகப் பணியாற்றிய ஸ்ரீ செம்மங்குடி முத்து ஸ்வாமிகள் அருளிய ஜெய மதுராஷ்டகம்.

    ஜெய மதுராஷ்டகம்

    நமஸ்தே ஏகவக்த்ரே, சிகிஜ்வால சிகே, சுபே

    வாமரூபே, கபாலதஹனே, ஸர்வாபரண பூஷிதே

    க்ரூரதம்ஷ்ட்ரே, ரக்தமல்யே, அஷ்டாதஸ புஜகரே

    மங்கள காரணே, மாத்ரே, மாதர் பலே ரக்ஷகே

    குங்குமப்ரியே, குணவாஸினே, குலவ்ருத்தி காரணே, ச்ரியே

    சூலம் டமருகஞ்சைவ, கபாலம் பாசதாரிணே

    ஓம்காரரூபிணே, சக்திவரரூபே, வராபயே

    ஸூகாஸனே, சாமுண்டே, ஸுந்தரி, யோகதீஸ்வரீ

    ஸிம்ஹ வாஹனப்ரியே, தேவீ, ஸ்யாமவர்ணேச சாம்பவீ

    மதுரகாளீ ஸ்மாசனவாஸே, மாத்ருகா, மஹாமங்களீ

    சிறுவாச்சூர் வாஸப்ரியே, சீக்ரவரமண்டிதே

    பூர்வபுண்ய தர்சனே தேவீ, மஹாமங்கள தர்சனீ

    ஜ்யோதிர்மயே, ஜயகாளிகே, துக்க நாஸனப்ரியே, சிவே

    ஜன்ம லாப வரேகாந்தே, மதுரே ஜ்யோதிரூபிணே

    ஸர்வக்லேச நாசினே, மாதே, ஸாவித்ரீ, அபீஷ்டானுக்ரஹே

    ஷோடசானுக்ரஹே தேவீ, பக்தானுக்ரஹ அர்ச்சிதே

    ஏகமாஸம் சுக்ரவாரே ஸௌபாக்யம் காளிதர்சனம்

    சுக்ர, ஸோம தினம் ஜப்த்வா ஸர்வமங்கள நிதி பாக்யதம்

    இஷ்டபூர்ணம் ஜபேத் நித்யம், அஷ்டஸித்தி ப்ராப்திதம் சுபம்

    இதி ஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம் ஸம்பூர்ணம்

    ReplyDelete
  14. ஸ்ரீ மதுராம்பிகையம்மாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், இக சுகங்களையும் கொடுத்து, மோக்ஷத்தையும் கொடுப்பாள் என்பதே உண்மை.
    நல்லபடியாக வாழ ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஒருநாள் என் கனவில் வந்தாள். நலமா என்றாள். எனக்கான நேரத்தை முடிவு செய் என்றேன். தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன். கலகலவென சிரித்தாள். காட்சி அளிக்கிறாயே என்று என்னுள் தோன்றியது. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. புனிதமான கோயிலாகக் கருதப்படும் வடக்குப் பார்த்த ஸ்ரீ மதுராம்பிகை காட்சி தருகிறார், சுவாரஸ்யமான நேரம் அளவற்ற பக்தி, பக்தியில் மகிழ்ந்த அன்னை ஸ்ரீ மதுரகாளி காட்சி தந்து அனுக்ரஹத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறாள். ஒரு புண்ணிய ஸ்தலம். ஒருமுறை அவசியம் விஜயம் செய்து
    அம்பாளின் பேரருளைப் பெறுங்கள்! ஒரே ஒருதடவை பார்த்துடணும் நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது
    அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா என்றார் ஒரு பக்தர். சிலா விக்ரஹம், உத்ஸவ விக்ரஹம் எல்லாம் இருக்கின்றன.

    ReplyDelete
  17. கலியுகத்திலே தான் வந்து அவதரித்தது தன்னுடைய சங்கல்பத்தினாலே என்று அழகாக எடுத்துக் காட்டுகிறாள். அவதார பிரயோஜனம் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் பக்தர்களை, ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் ரக்ஷிப்பதற்கும் என்கிறாள். நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறாள். உன் துணை நாடி வந்தால் தாயே துயரங்கள் வந்தாலும் உந்தன் பார்வையாலே போக்கி அருளிடுவாய், காத்திடுவாய் நீயே. வாய் திறந்து அழைத்திடும் முன் உன்னருளை தருவாய் நீயே உன் பிள்ளை என்னை காத்திடு. தியானம் நம் லக்ஷியம். அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை, பிரதி தினமும் விச்ராந்தியாக தியானம் செய்யப் பழகவேண்டும். பக்தி உபாஸனை, தியானம் எல்லாம் ஒன்றுக்கொன்று விரோதமில்லை. நிறைய அநுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

    ReplyDelete
  18. அகிலத்தை காக்கும் அன்னையே
    சிறுவாச்சுரில் அழகியாய் வந்துதித்த ஸ்ரீமதுரகாளி தேவியே
    பக்தரைக் காக்க காத்திருந்த தாயே
    கோயிலில் என்றும் அழகிய வடிவாய்
    காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
    உன்னை என்றென்றும் போற்றி வழிபடும்
    என் உள்ளமே
    புறத்தே கண்டு உன்னை தரிசித்த நான்
    உன்னை என் அகத்தே கொண்டு எந்நேரமும்
    தரிசித்து மகிழ நினைத்தேன் ஆனால் தாயே
    பயங்கரமான பக்தர்களின் கூட்டம்
    புகுந்துகொண்டு உன்னைக் காண என்னை உள்ளே
    அனுமதிக்க மறுத்துவிட்டதே நான் என்ன செய்வேன்
    ஒரு வாசல் வழியாக புகுந்து மறு வாசல் வழியாக மீண்டும் உள்ளே வர அனுமதி மறுத்துவிட்டதை நீ அறியாயோ
    பொறியில் சிக்கிய எலிபோல் என் மனம்
    பட்ட பாடு அறியாயோ
    உன்னையே எந்நேரமும் எண்ணி உள்ளேன்
    காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
    தாமதம் செய்யாது அருள் .புரிவாயே
    உன் மீது கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
    என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன்
    எளிமையான வாழ்வு ஏகாந்தமான அன்னையின் நாம பஜனை
    வாழ்வில் சோகங்கள் அண்டாது காக்கும் ஸ்ரீ மதுராம்பிஹே நாமம்
    ஆசைகள் என்னும் பேய்கள் நம்மிடம் வாலாட்டாது
    நாம் அழியா நிலை பெற அவள் மீது
    கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
    ஒவ்வொரு பக்தனும் தனக்கு முதற்காரணம் கடவுள் என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்துவான்.

    ReplyDelete
  19. அகிலத்தை காக்கும் அன்னையே
    சிறுவாச்சுரில் அழகியாய் வந்துதித்த ஸ்ரீமதுரகாளி தேவியே
    பக்தரைக் காக்க காத்திருந்த தாயே
    கோயிலில் என்றும் அழகிய வடிவாய்
    காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
    உன்னை என்றென்றும் போற்றி வழிபடும்
    என் உள்ளமே
    புறத்தே கண்டு உன்னை தரிசித்த நான்
    உன்னை என் அகத்தே கொண்டு எந்நேரமும்
    தரிசித்து மகிழ நினைத்தேன் ஆனால் தாயே
    பயங்கரமான பக்தர்களின் கூட்டம்
    புகுந்துகொண்டு உன்னைக் காண என்னை உள்ளே
    அனுமதிக்க மறுத்துவிட்டதே நான் என்ன செய்வேன்
    ஒரு வாசல் வழியாக புகுந்து மறு வாசல் வழியாக மீண்டும் உள்ளே வர அனுமதி மறுத்துவிட்டதை நீ அறியாயோ
    பொறியில் சிக்கிய எலிபோல் என் மனம்
    பட்ட பாடு அறியாயோ
    உன்னையே எந்நேரமும் எண்ணி உள்ளேன்
    காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
    தாமதம் செய்யாது அருள் .புரிவாயே
    உன் மீது கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
    என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன்
    எளிமையான வாழ்வு ஏகாந்தமான அன்னையின் நாம பஜனை
    வாழ்வில் சோகங்கள் அண்டாது காக்கும் ஸ்ரீ மதுராம்பிஹே நாமம்
    ஆசைகள் என்னும் பேய்கள் நம்மிடம் வாலாட்டாது
    நாம் அழியா நிலை பெற அவள் மீது
    கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
    ஒவ்வொரு பக்தனும் தனக்கு முதற்காரணம் கடவுள் என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்துவான்.

    ReplyDelete
  20. கலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது பகவான் நாமத்தைச்சொல்லிக் கொண்டே இருப்பது ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது ஒரு நாள் ஸ்ரீ மதுரகாளி விடிகாலை நேரத்தில் அச்சரீரியாக சொப்பனத்தில் சொன்னாள். சூட்சுமமாகவும் குறிப்பிட்டாள். சொன்னதைக் கேட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அம்பிகையையும் பெரியவாளையும் பிரார்த்திக்கிறேன். மஹாபெரியவா குருநாதர் அருளிருந்தால் குறைகளெல்லாம் தீர்ந்து விடும். சஞ்சலமில்லாமல் அம்பிகையின் ஆக்ஜ்யை படி அருளை வேண்டி அணுகிரகத்தை அடைய எடுத்துக்கூறுகிறேன் இவ்வுலகில் ஒரு நடமாடும் தெய்வமாகவே விளங்குபவள். மொத்த இந்தியாவையும் கவர்ந்திழுக்கின்றாள். எனக்கு இது ஒரு விதமான நம்பிக்கை. தெய்வீக சூட்சுமம் அனைவரும் பெற்று மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண ஆகர்ஷன அம்பிகையிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அப்படியென்ன நற்குணங்கள். நன்கு தியானம் செய்து பார்த்து அந்த குணங்களுள்ளவளை பற்றி சொல்லுகிறேன். அவளருளால் மதுரமொழியால் உலக னைத்தையும் உணர்த்துபவள். குறிப்பிட்ட நாட்களில் பரம்பரை,பரம்பரையாக வந்து பூஜித்து வழிபடும் நம்பிக்கை உள்ளதாகவும், பிறவியின் பெருங்கடலை நீந்திட இருள் விலகும் ஒளி தோன்றும்,சில பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ரம்யமான இந்நேரம், திருக்கோவில் தேடி வந்து திருவடியை நாடி நின்றோம். நிதர்சனமான எடுத்துக் காட்டு. இவ்வாலயத்தில் சுந்தர மாகாளியாக இருந்து அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் இராகு காலத்தில் காளியை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும், துன்பங்களை நீக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவாள் என்பது நம்பிக்கை. அம்பாளிடம் மனம் ஈடுபட சில நாட்களாக என் கனவில் இந்த அழகு தேவதையின் தரிசனம் காண்கிறேன். நீ என் எண்ணத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும் நீ செய்திடும் செயல் யாவையும் நீ எப்பொழுதும் முன்னின்று பார்க்க வேண்டும் எப்போதும் காக்க வேண்டும் துணையாக வர வேண்டும் நமஸ்காரம் செய்கிறேன்.அம்பிகையின் சன்னிதிக்கு சென்று இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கைகூப்பி வணங்கி, பின்பு கண்மூடியபடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி ன். அவள் யார் என்பதன் விளக்கமும் இங்கு கிடைத்து
    விட்டது. பக்தர்களின் பாபத்தைப் போக்குகிற அவள் சரணத்தில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் கொடாது.தன் தேஜஸ் மூலம் அனைவருக்கும் அருள் வழங்குவதே அவள் நோக்கம். ஹே தாயே ஸ்ம்ஹாரம் செய்த பரமேச்வரரின் ப்ரிய பத்தினியே. அம்பாளை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் கூட நீங்கி நிம்மதியாக வாழலாம். இப்பூவுலகில் அவளின் அவதாரத்துக்கு முக்கிய பிரயோஜனம் என்ன என்பதைக் காட்டுகிறது. சிறுவாச்சூர் ஆலயத்திற்குள் சுந்தர மாகாளி அன்பு வடிவாய் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பரிபூர்ண அருள் மற்றும் க்ருபை கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பிறவியின் பெருங்கடலை நீந்திட இருள் விலகும் ரம்யமான திருக்கோவில். மனம் தூய்மை பெற வேண்டுமானால்,தியானம் செய்வதை அன்றாட கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இறைவனின் திருநாமத்தை வாய்விட்டோ, உதட்டளவிலோ உச்சரிக்காமல் மனத்திலிருந்து திரும்பத்திருமப சொல்லும்போது உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாமே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவளை உணர முயற்சி செய்து பாருங்களேன். ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவளுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், அவளின் கருணையை எளிதாக அறிந்து கொள்ளலாம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவள்.அவளுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் வேண்டும். கோடி வேலைகளிருந்தாலும் அவற்றை புறக்கணித்து மாகாளியை ஸ்மரிக்க வேண்டும். வெற்றியினில் முடிவதெல்லாம் அவளருளால். இதனை தெரியாத சமாசாரம் இப்பூவுலகில் உண்டோ. 

    ReplyDelete
  21. அம்பிகையின் புன்னகையில் இரு விழி உறவாடி அவளை உணர
    ஒரு கரம் அன்புடனே அழைக்க அவளது மறு கரம் அருள இருதயம் லேசாகி விழுந்து வணங்கி நமஸ்காரம் செய்கிறேன். நான்கு கரங்களை உடையவள். சூலினியாக சூலத்தை கையில் ஏந்திருக்கிறாள். தேன் போன்ற இனிய குணம் உடையவள். தேன் மீது மிக்க ப்ரியம்கொண்டவள். பக்தர்களுக்கு சுகத்தையும், வரத்தையும் தரவல்லவள். தன்னை அண்டி திருநாமம் சொல்லி பக்தி செய்யும் பக்தர்களுக்கும் மட்டுமில்லாமல் அனைவருக்கும் ஸுகத்தை தரவல்லவள். சக்ர ஸ்தானத்தில் வீற்றிருப்பவள். முதலாவதாக அவள் மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். சரணாகதி அடையவேண்டும். தெரிந்துகொள்ளத் தெரிந்துகொள்ள பக்தி பெருகும், ஆசை அதிகரிக்கும். அவளுடைய திருநாமங்களைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கத் தோன்றும். சொல்பவருக்கும் புண்ணியம்; கேட்டவர்க்கும் புண்ணியம். நம்முடைய பணியைச் செம்மையாகச் செய்து கொண்டிருந்தால், சிறுவாச்சூர் சுந்தர மாகாளி தனது கடமையை, கருணையும் வாஞ்சையும் பொங்க, சீக்கிரமே நிறைவேற்றுவாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  22. அம்பிகையின் புன்னகையில் இரு விழி உறவாடி அவளை உணர
    ஒரு கரம் அன்புடனே அழைக்க அவளது மறு கரம் அருள இருதயம் லேசாகி விழுந்து வணங்கி நமஸ்காரம் செய்கிறேன். நான்கு கரங்களை உடையவள். சூலினியாக சூலத்தை கையில் ஏந்திருக்கிறாள். தேன் போன்ற இனிய குணம் உடையவள். தேன் மீது மிக்க ப்ரியம்கொண்டவள். பக்தர்களுக்கு சுகத்தையும், வரத்தையும் தரவல்லவள். தன்னை அண்டி திருநாமம் சொல்லி பக்தி செய்யும் பக்தர்களுக்கும் மட்டுமில்லாமல் அனைவருக்கும் ஸுகத்தை தரவல்லவள். சக்ர ஸ்தானத்தில் வீற்றிருப்பவள். முதலாவதாக அவள் மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். சரணாகதி அடையவேண்டும். தெரிந்துகொள்ளத் தெரிந்துகொள்ள பக்தி பெருகும், ஆசை அதிகரிக்கும். அவளுடைய திருநாமங்களைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கத் தோன்றும். சொல்பவருக்கும் புண்ணியம்; கேட்டவர்க்கும் புண்ணியம். நம்முடைய பணியைச் செம்மையாகச் செய்து கொண்டிருந்தால், சிறுவாச்சூர் சுந்தர மாகாளி தனது கடமையை, கருணையும் வாஞ்சையும் பொங்க, சீக்கிரமே நிறைவேற்றுவாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  23. கண்ணை கவரும் சிறுவாச்சூர் (அன்னை குடி கொண்டு இருக்கும் தலம்) சுந்தர மதுர மாகாளி மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். எனக்கு நீதாம்மா எல்லாமே என்று சரணாகதி அடையவேண்டும். கண்களை மூடி அனுதினம் ஆழ்ந்த தியானம் இருந்து பொன்னான நகைகள் சூடும் அம்பிகையின், ஒரு தாயைப் போல், நாமங்களைக் கூறிக் கொண்டு, மலர் கொண்டு அர்ச்சித்து, தற்போது எல்லா சாஸ்த்ரங்களும் அறிந்த சில பக்தர்கள் வழிபாடுகளில் சுயநலமின்றி உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். வெளியே போகவே வேண்டாம். பிரத்யட்சமாக அருளைத் தந்து அறியாமை விலகி வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்வாள். அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தி சிறுவாச்சூர் சுந்தர மதுர மாகாளி. சௌந்தர்யமான மதுரகாளி உருவம். தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் ஸ்ரீ சுந்தர காளி
    அந்த பராசக்தி. அன்னை காளி என்றாலும் சாந்த ரூபத்தில் அன்னையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. இப்புராதன ஆலயம் அரசினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
    யாதுமாகி நின்றாய் காளி
    எங்கும் நீ நிறைந்தாய்
    தீது நன்மையெல்லாம் – நின்றன்
    செயல்களின்றி இல்லை
    போதும் இந்த மாந்தர் வாழும்
    பொய்மை வாழ்க்கையெல்லாம்
    ஆதி சக்தி தாயே – என் மீது
    அருள் புரிந்து காப்பாய். -- மஹாகவி பாரதியார்.
    அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர். அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி. தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சிறுவாச்சூர் சுந்தர மதுர காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் அம்மன்.


    ReplyDelete
  24. கண்ணை கவரும் சிறுவாச்சூர் (அன்னை குடி கொண்டு இருக்கும் தலம்) சுந்தர மதுர மாகாளி மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். எனக்கு நீதாம்மா எல்லாமே என்று சரணாகதி அடையவேண்டும். கண்களை மூடி அனுதினம் ஆழ்ந்த தியானம் இருந்து பொன்னான நகைகள் சூடும் அம்பிகையின், ஒரு தாயைப் போல், நாமங்களைக் கூறிக் கொண்டு, மலர் கொண்டு அர்ச்சித்து, தற்போது எல்லா சாஸ்த்ரங்களும் அறிந்த சில பக்தர்கள் வழிபாடுகளில் சுயநலமின்றி உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். வெளியே போகவே வேண்டாம். பிரத்யட்சமாக அருளைத் தந்து அறியாமை விலகி வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்வாள். அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தி சிறுவாச்சூர் சுந்தர மதுர மாகாளி. சௌந்தர்யமான மதுரகாளி உருவம். தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் ஸ்ரீ சுந்தர காளி
    அந்த பராசக்தி. அன்னை காளி என்றாலும் சாந்த ரூபத்தில் அன்னையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. இப்புராதன ஆலயம் அரசினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
    யாதுமாகி நின்றாய் காளி
    எங்கும் நீ நிறைந்தாய்
    தீது நன்மையெல்லாம் – நின்றன்
    செயல்களின்றி இல்லை
    போதும் இந்த மாந்தர் வாழும்
    பொய்மை வாழ்க்கையெல்லாம்
    ஆதி சக்தி தாயே – என் மீது
    அருள் புரிந்து காப்பாய். -- மஹாகவி பாரதியார்.
    அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர். அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி. தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சிறுவாச்சூர் சுந்தர மதுர காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் அம்மன்.


    ReplyDelete
  25. இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், குலதெய்வத்தையே முதலில் வணங்க வேண்டும். குலதெய்வத்தின் அனுமதியை பெற்ற பிறகு புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது மரபு. குலதெய்வத்தின் அனுகிரகம் இல்லை என்றால் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
    தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், குலதெய்வத்தின் சக்தியால் தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்பது விதி. எங்கும் வியாபித்திருப்பதுமான அன்னையை ஸ்ரீ மதுரகாளியை பிரார்த்திக்கிறேன். பக்தி ஒன்றே மனத்தூய்மை அளிக்கும். பக்தர்களின் ஹ்ருதயத்தில் இருளகற்றுபவள். முழுமையாகச் சரணடைந்து எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  26. பக்தியில் உன்னருளாலே பாவங்கள் அழிந்து வாழ்வினிலே உந்தன் துணை கண்டதும் மனக்கண்ணில் உன்னை நினைத்ததும் உடல் சிலிர்கிறதே. உன்னடி நிதம் நாடிட வரம் தர வேண்டும். உந்தன் அருள் மழை நனைந்ததும் ஞானமும் பிறக்கிறதே கருணை தெய்வமே. வடக்கு திசை நோக்கி நுழைவு வாசலுடன் அன்னை ஸ்ரீ மதுரகாளி ஆலயம் அமைந்துள்ளது. கருவறை முன்புறம் விநாயகர். வடக்கு நோக்கிய கருவறைக்குள் பிரமாண்ட கோலத்தில் சிம்ம வாகனம் இடது காலை மடக்கிய அமர்ந்த கோலத்தில் அம்மன்காட்சி தருகிறாள். அம்மனுக்கு எதிரே பலிபீடம். அபிஷேக அலங்காரம் ஆராதனைகள் நடத்தப்டுகின்றன. சூலம், உடுக்கை ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.


    ReplyDelete
  27. அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தையே ஸமரணம் செய்து முழு நம்பிக்கை வைத்து வணங்கி தஞ்சமடைந்து எதற்கும் பயப்பட தேவைஇல்லை.

    ReplyDelete
  28. நற்குணமும் நல்வழியும் அருளும் அன்னை ஸ்ரீ மதுரகாளியை நம் மனதில் பூஜித்து நலம் பெறுவோமே. அம்மன் ஸ்தோத்ரத்தில் கேட்கின்ற வரமளிக்கும், தேடிப்போகமல், கேளாமல் துணை நிற்கும், நம்மை வாழ வைக்கும், எல்லாவற்றிற்கும் மூலகாரண அன்னையை நாளும் வேண்டியே நலம் பெறுவோமே. நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே என்று கண்களில் கண்ணீர் வழிந்தோட மனஸார நினைத்து நமஸ்காரம் பண்ணி வந்தனம் செய்வோமே. நமஸ்காரம் பண்ணுவதுதான் நமக்கு அம்ருதம். அன்னையை பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ! காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  29. உலகில் வேறு எங்கும் இல்லாத கோயிலாக தமிழக அரசின் ஆதரவோடு அன்னை ஸ்ரீ மதுரகாளி கோயில் விளங்குகிறது. அன்னையை ஸ்ரீ மதுரகாளியை பூஜித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.பரிகார ஸ்தலமாக திகழும் இங்கு பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகளவில் உள்ளது. திருமணத்தடை நீங்க, குழந்தைபாக்கியம் கிடைக்க, கல்வி, வேலை, வியாபாரங்களில் சிறக்க வேண்டிக்கொள்ளலாம். வேண்டிக்கொண்ட காரியங்கள் நடந்திட அம்பாளுக்கு முல்லைப்பூ மாலை சாத்தி, வஸ்திரம் சாத்தி பூஜை, சிறப்பு அபிஷேகங்கள் விசேஷ அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.

    ReplyDelete
  30. ஸ்ரீ காஞ்சி காமகோடீ மஹா பெரியவா கண்ட சர்வ சக்தி ஸ்ரீ மதுரகாளி
    ஆதி சங்கரரின் மனதினில் தோன்றி அவர்கள் முன் அவதாரமாய் வந்த ஆச்சர்ய ஸ்வரூபமானவள்
    அம்பாள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம்
    ஆஸ்வாசம் மேலிட நம் மனம்: சரணமென சொல்லவொண்ணா ஆனந்தத்தில் மனமும் துள்ளுது
    உந்தன் திருச்சந்நிதி நம் வீடாகுமே அம்மா தாயே
    என் இரு விழி நீரே உனக்கு புஷ்பாஞ்சலி
    உன் பெயர் ஒலிக்குது இங்கு மணம் வீசுது
    உன்னை வலம் வரும் போதிலே மனம் லேசாகுது
    ஏன்னென்று புரியாமல் மனம் நடுங்குது
    அறியாமல் உன் நாமம் உடன் வெளி வருகுது
    சொன்னவுடன் சோதனையும் விலகி ஓடுது
    ஆனந்தத்தில் மனமும் உன்னை ஈர்த்து துள்ளுது
    அள்ள அள்ளக் குறையாத அருளும் பெருகுது
    உன் கோயில் வலம் வந்து என்றும் நலம் காண
    உன் புகழ் பாட என்றும் உன்னை வேண்ட
    என் மனதாலே நான் செய்யும் ஆராதனை
    இது தானே என்றென்றும் என் பிரார்த்தனை.
    எல்லாருக்கும் இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
    எல்லாருக்கும் துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
    எல்லாருக்கும் அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி
    சர்வ சக்தி நீ, என்னை. ஆள்வது நீயே
    உன் தீபத்தின் ஒளி எங்கும் பிரகாசிக்கிறது
    புகழை நான் வேண்டவா
    பொருளை நான் வேண்டவா
    நல்ல பண்பை நான் வேண்டவா
    நற்செயல்களேயே செய்யும் நீ, ,துன்பமும் அண்டாதபோது
    வேறென்ன கேட்கலாம் உணர்வால் நான் அறிகிறேன்
    உன்னுடைய ஒளியால் இவ்வுலகமே ஒளி பெற்று பிரகாசிக்கிறது
    தேஹிமே க்ருபையை சாந்த ஸ்வரூபியே
    உன் நாமம் சொல்ல இந்த ஜன்மம் போதாது
    பல கோடி ஜன்மாவாக உன் பைத்தியம்
    உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
    உன் மாயை என் மன அறியாமை அகற்றும்
    நின் பொற்பாதம் போற்றி

    ReplyDelete
  31. ஸ்ரீ காஞ்சி காமகோடீ மஹா பெரியவா கண்ட சர்வ சக்தி ஸ்ரீ மதுரகாளி
    ஆதி சங்கரரின் மனதினில் தோன்றி அவர்கள் முன் அவதாரமாய் வந்த ஆச்சர்ய ஸ்வரூபமானவள்
    அம்பாள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம்
    ஆஸ்வாசம் மேலிட நம் மனம்: சரணமென சொல்லவொண்ணா ஆனந்தத்தில் மனமும் துள்ளுது
    உந்தன் திருச்சந்நிதி நம் வீடாகுமே அம்மா தாயே
    என் இரு விழி நீரே உனக்கு புஷ்பாஞ்சலி
    உன் பெயர் ஒலிக்குது இங்கு மணம் வீசுது
    உன்னை வலம் வரும் போதிலே மனம் லேசாகுது
    ஏன்னென்று புரியாமல் மனம் நடுங்குது
    அறியாமல் உன் நாமம் உடன் வெளி வருகுது
    சொன்னவுடன் சோதனையும் விலகி ஓடுது
    ஆனந்தத்தில் மனமும் உன்னை ஈர்த்து துள்ளுது
    அள்ள அள்ளக் குறையாத அருளும் பெருகுது
    உன் கோயில் வலம் வந்து என்றும் நலம் காண
    உன் புகழ் பாட என்றும் உன்னை வேண்ட
    என் மனதாலே நான் செய்யும் ஆராதனை
    இது தானே என்றென்றும் என் பிரார்த்தனை.
    எல்லாருக்கும் இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
    எல்லாருக்கும் துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
    எல்லாருக்கும் அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி
    சர்வ சக்தி நீ, என்னை. ஆள்வது நீயே
    உன் தீபத்தின் ஒளி எங்கும் பிரகாசிக்கிறது
    புகழை நான் வேண்டவா
    பொருளை நான் வேண்டவா
    நல்ல பண்பை நான் வேண்டவா
    நற்செயல்களேயே செய்யும் நீ, ,துன்பமும் அண்டாதபோது
    வேறென்ன கேட்கலாம் உணர்வால் நான் அறிகிறேன்
    உன்னுடைய ஒளியால் இவ்வுலகமே ஒளி பெற்று பிரகாசிக்கிறது
    தேஹிமே க்ருபையை சாந்த ஸ்வரூபியே
    உன் நாமம் சொல்ல இந்த ஜன்மம் போதாது
    பல கோடி ஜன்மாவாக உன் பைத்தியம்
    உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
    உன் மாயை என் மன அறியாமை அகற்றும்
    நின் பொற்பாதம் போற்றி

    ReplyDelete
  32. ஆச்சர்யங்கள் இருக்கின்றன அவள் கடாக்க்ஷம் கேட்கவேண்டாம் அம்மன் அருள் வெள்ளியன் று சாத்திய மலர்கள் திங்களில் வாடாது இன்று காலையில் பூத்த மலர்கள் மாதிரி ஆனந்தமாய் சிரிக்கின்றன அவளுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதாவது ஒரு வழியில் அவளிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவள் அருள் செய்வாள் வருகின்ற கஷ்டங்களில் அனுக்ரஹத்தை உணர்ந்தாலே போதும். மனதில் நம்பிக்கை வைத்தாலே போதும். எத்தனை பேர் என்ன சொன்னாலும் உன் அம்மனிடத்தில் நம்பிக்கை மாறாமலிருந்தாலே போதும் நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டு அவளை விடாமல் பிடித்துக்கொண்டு அவள் நாம ஜபம் செய்துகொண்டு வருவதை ஏற்றுக்கொண்டு உன் கடமைகளை பண்ணிக்கொண்டு வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தாலே போதும் சந்தோஷத்தை உணர்ந்தாலே போதும். அவள் பாக்கியம் பெற்ற நீ ஒரு போதும்
    கலங்கலாமா அழலாமா புலம்பலாமா பரிதவிக்கலாமா
    நொந்து போகலாமா சோர்ந்து விடலாமா
    வாழ்க்கையை வெறுக்கலாமா நம்பிக்கையை இழக்கலாமா துவண்டு போகலாமா உற்சாகத்தோடு
    வாழ் எனது வாழ்க்கையில் ஒளியை நீயும் கொஞ்சம் தருவாயே ஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே 

    ReplyDelete
  33. வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். ஆடி மாதம் ஸ்ரீ மதுரகாளியை வழிபட்டால் உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். ஆடிப்பூரத் தன்று அம்மன் மனம் குளிர்ந்து இருப்பாள். ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். செவ்வரளி வைத்து செல்வம் கொழிக்கும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். ஆடி மாதம் பெண்களை அம்மனாக பாவித்து, குங்குமப் பிரசாதங்களை வாங்கி பொட்டலம் போட்டு, ஒவ்வொருவருக்கும் ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும். பிரசாதம் என்று சொன்னவுடன் அனைவருமே மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வார்கள்.
    இந்த காரியத்தை தொடர்ந்து பண்ணுங்கோ!!

    ReplyDelete
  34. வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். ஆடி மாதம் ஸ்ரீ மதுரகாளியை வழிபட்டால் உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். ஆடிப்பூரத் தன்று அம்மன் மனம் குளிர்ந்து இருப்பாள். ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். செவ்வரளி வைத்து செல்வம் கொழிக்கும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். ஆடி மாதம் பெண்களை அம்மனாக பாவித்து, குங்குமப் பிரசாதங்களை வாங்கி பொட்டலம் போட்டு, ஒவ்வொருவருக்கும் ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும். பிரசாதம் என்று சொன்னவுடன் அனைவருமே மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வார்கள்.
    இந்த காரியத்தை தொடர்ந்து பண்ணுங்கோ!!

    ReplyDelete
  35. நினைத்தால் தவறாமல் ஸ்ரீ மதுரகாளி துணை வந்திடுவாள்.
    நம் வாழ்வில் ஒரு நாளும் குறை இல்லை. அதிகாலை கண் விழித்து, படுக்கைக்குச் செல்முன் இரவில் நினைப்போரை தாயின் தயை அரவணைத்து உதவும் அழைத்தவரை மனதிற்குள் வைப்பாள். காலங்காலமாக இது நியதி. என்றும் பிரச்னைகள்
    வராது. தெரிந்துகொண்டால் நன்மைகளைப் பெற முடியும்.

    ReplyDelete
  36. நினைத்தால் தவறாமல் ஸ்ரீ மதுரகாளி துணை வந்திடுவாள்.
    நம் வாழ்வில் ஒரு நாளும் குறை இல்லை. அதிகாலை கண் விழித்து, படுக்கைக்குச் செல்முன் இரவில் நினைப்போரை தாயின் தயை அரவணைத்து உதவும் அழைத்தவரை மனதிற்குள் வைப்பாள். காலங்காலமாக இது நியதி. என்றும் பிரச்னைகள்
    வராது. தெரிந்துகொண்டால் நன்மைகளைப் பெற முடியும்.

    ReplyDelete
  37. ஏராளமான பக்தர்கள் எல்லா இடங்களில் இருந்தும் சிறுவாச்சூர் ஆலய தலத்துக்கு வந்தபடி இருக்கின்றனர். தரிசித்துச் செல்கின்றனர். காரணம் - இந்தத் தலத்தின் நாயகி அன்னை ஸ்ரீ மதுரகாளி. மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம். மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட சக்தியும் சாந்நித்யமும் கொண்ட திருத்தலம் சிறுவாச்சூர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஈசன் ஸ்ரீ மதுரகாளியாக அவதரிக்கச் செய்தார். அவனை அழித்தொழித்தாள். பிறகு அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன. பக்தர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுள்ளம் கொண்டாள். சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங்களைத் தந்து மகிழ்விக்கிறாள். இங்கே ஸ்ரீசதாசிவ
    ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருக்கும் மஹாதேவி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள். அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு. மகா பெரியவா குலதெய்வம். இது சாதாரண தலமல்ல, மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான் இங்கு வரமுடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீ மதுரகாளி துணை வந்திடுவாள், ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ மதுரகாளியை வழிபட்டால், தரிசனம் செய்தால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும், வழிக்கு துணையாகும். குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும் என்பது தனி சிறப்பு.

    ReplyDelete
  38. ஏராளமான பக்தர்கள் எல்லா இடங்களில் இருந்தும் சிறுவாச்சூர் ஆலய தலத்துக்கு வந்தபடி இருக்கின்றனர். தரிசித்துச் செல்கின்றனர். காரணம் - இந்தத் தலத்தின் நாயகி அன்னை ஸ்ரீ மதுரகாளி. மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம். மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட சக்தியும் சாந்நித்யமும் கொண்ட திருத்தலம் சிறுவாச்சூர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஈசன் ஸ்ரீ மதுரகாளியாக அவதரிக்கச் செய்தார். அவனை அழித்தொழித்தாள். பிறகு அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன. பக்தர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுள்ளம் கொண்டாள். சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங்களைத் தந்து மகிழ்விக்கிறாள். இங்கே ஸ்ரீசதாசிவ
    ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருக்கும் மஹாதேவி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள். அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு. மகா பெரியவா குலதெய்வம். இது சாதாரண தலமல்ல, மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான் இங்கு வரமுடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீ மதுரகாளி துணை வந்திடுவாள், ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ மதுரகாளியை வழிபட்டால், தரிசனம் செய்தால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும், வழிக்கு துணையாகும். குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும் என்பது தனி சிறப்பு.

    ReplyDelete
  39. மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரம குலதெய்வம் அன்னை ஸ்ரீ மதுரகாளி. அவள் மங்கள சொரூபமாக எங்கும் வியாபித்திருப்பவள். நாள்தோறும்அதிகாலையிலேயே கண்விழித்து நீராடி உபவாஸம் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ச்ரத்தையுடன் பக்தியுடன் பூஜைகளுக்கு வேண்டிய புஷ்பங்களை கொண்டு பூஜை செய்து நமோऽஸ்து உன்னை வணங்குகிறேன், உன்னைவிட உயர்ந்த அன்பு செலுத்துபவரில்லை, அம்மா தாயே. மனதைக் கவரூம் ஸ்வர்ண சொரூபம். முற்பிறவியிலேயோ, இப்பிறவியிலேயோ செய்த பாபத்தின் பலன்களான வ்யாதிகளை அடைகிறோம்; உன் அருளாலேயே அச்சம் வெல்லப்படுகிறது. எனக்கு நம்பிக்கை பாவங்களை போக்கும். ஏனெனில், அருள்புரி, மகிமைகளை செய்யும் ஆதியாகிய உன்னை விரும்புகிறேன். எனக்குப் பிரத்தியக்ஷ தெய்வம். நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை. பக்தியுடன் பரமேச்வரி அவளிடத்திலேயே ச்லோகங்களை சொல்லி லயித்திருப்பேன். ஒரு சமயம் மதுரமான பேச்சைப் பேசுபவள். இது ஒரு உண்மைச் சம்பவம்.

    ReplyDelete
  40. என் விருப்பம் மஞ்சள் நிற மலர் மாலைகளை எடுத்துக் கொண்டு சென்று விரைவில்அன்னை ஸ்ரீ மதுரகாளிக்கு சூடி திருமேனியை அலங்கரித்து ஜ்வலிக்க அவள் திருமுக மலர்ச்சியைக் காண வேண்டும். திருக்கோவிலில் இந்த தெய்வீகமான திருக்காட்சியைக் காண பெருந்திரளாக மக்கள் கூடியிருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் வந்தார்கள். அம்பாள் அந்தத் திருக்காட்சியைக் கண்டு அங்கே குழுமியிருக்கும் மக்களும் மகிழ்ச்சிக் கண்ணீர் சொரிந்து ஆரவாரிக்கின்றனர் என்று சொல்லலாம். அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பிகையே அறியாமை அகன்றிட அடியேன் மீது கருணை செய்வாய். அவளைப் பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ! காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  41. அன்னை ஸ்ரீ மதுரகாளி பணிவாய் தினம் வேண்டிகொண்டால், தினமும், சிரத்தையுடன் பூஜை செய்தால் தாயாய்குறை வருமுன் காப்பாள் மனம் கலங்கிட வேண்டாம். அன்னை வந்திட துணை இனித்திடும். இறைவனை சரணடையும் என்பதால் பூஜை செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம். அனுக்ரகத்தால் சுபாகாரியம் நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். குழந்தைகளின் க்ஷேமத்துக்காக அன்னை ஸ்ரீ மதுரகாளி
    திருக்கோவில் நம்பிக்கையோடு அழைத்துப் போகவேண்டும். அன்னை ஸ்ரீ மதுரகாளி அருளை நிச்சயம் பரிபூரணமாகப் பெறலாம். தெய்வத் திருப்பணி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம். தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். எங்கும் எதிலும் இருக்கின்றாள். அம்பாளை மன உறுதியுடன் வேண்டினால் நன்மை உண்டாகும். ஞானம் பெற, பிறவிப் பிணித் தீர, மனதை பக்தி மார்க்கத்தில். மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தால், எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். அம்பாள் எப்பொழுதும் நம்முடன் இருப்பாள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.


    ReplyDelete
  42. அன்னை ஸ்ரீ மதுரகாளி பணிவாய் தினம் வேண்டிகொண்டால், தினமும், சிரத்தையுடன் பூஜை செய்தால் தாயாய்குறை வருமுன் காப்பாள் மனம் கலங்கிட வேண்டாம். அன்னை வந்திட துணை இனித்திடும். இறைவனை சரணடையும் என்பதால் பூஜை செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம். அனுக்ரகத்தால் சுபாகாரியம் நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். குழந்தைகளின் க்ஷேமத்துக்காக அன்னை ஸ்ரீ மதுரகாளி
    திருக்கோவில் நம்பிக்கையோடு அழைத்துப் போகவேண்டும். அன்னை ஸ்ரீ மதுரகாளி அருளை நிச்சயம் பரிபூரணமாகப் பெறலாம். தெய்வத் திருப்பணி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம். தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். எங்கும் எதிலும் இருக்கின்றாள். அம்பாளை மன உறுதியுடன் வேண்டினால் நன்மை உண்டாகும். ஞானம் பெற, பிறவிப் பிணித் தீர, மனதை பக்தி மார்க்கத்தில். மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தால், எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். அம்பாள் எப்பொழுதும் நம்முடன் இருப்பாள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.


    ReplyDelete
  43. அன்னை ஸ்ரீ மதுரகாளி உபாசகர், பக்தி நிரம்ப ஆசாரத்தோடு, தன்னை மறந்து ஒருநாள் பக்தர்களின் மங்களம் வேண்டி பிரார்த்திக்க கோயில் சென்றார். ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன் என்றாராம். சக்தியை வழிபட அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே; அன்னை வழக்கம்போல, நல்லவர்களின் பக்கமே எப்போதும், அம்மா காலம் தாழ்த்தாது தன்னை அண்டியவர்களுக்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த குணமுடையவனாகத் திகழ்ந்தாள். யார் அம்மா திருமேனியை அலங்கரித்து பூஜிக்கிறார்களோ, அனைத்தையும் விட்டு உணர்ச்சி மேலிட கை வணங்கி நிற்கிறார்களா, அவர்களுக்கு முக்தி நிச்சயம்.தன் சூலாயுதத்தால் புனிதமடையச் செய்ய வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலியாக நீண்ட காலம் வாழ்வார்கள். இதயத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் உன்னை, அலையாமல் திரியாமல் அறிய உள்ளமும் தந்தாய்; அம்பிகையே, உன் ஸுபிக்ஷத்திற்குக் குறைச்சலில்லை. ஆனால், வேடிக்கை என்னவென்றால், காலம் சென்றுவிடும் என்றுதான் நானறியேன். அம்மையே அடியேன் மீது கருணை செய்வாய்.

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. தியானம்

    களத்ரக்த முண்டாவலீ கண்டமாலா
    மஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா |
    விவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீ
    மஹாகாள காமகுலோ காளிகேயம் |
    புஜே வாம யுக்மே சிரோஸிம் ததானா
    வரம் தக்ஷயுக்மே பயம் வை ததைவ |
    ஸூமத்யாபி துங்கஸ்தனா பாரநம்ரா
    லசத்ரக்த ஸ்ருக்த்வயா ஸூஸ்மிதாஸ்யா | |
    சவத்வந்த்வ கர்ணாவதம்ஸா ஸூகேஸீ
    லஸத்ப்ரேத பாணிம் ப்ரயுக்தைக காஞ்சீ |
    சவா காரமஞ்சாதிரூடா சிவாபிச்
    சதுர்திக்ஷு சப்தாய மானபிரேஜே ||
    விரஞ்சாதி தேவாஸ்த்ரஸ்தே குணாஸ்த்ரீம்
    ஸமாராத்ய காளிம் ப்ரதானா வபூவூ:
    அநாதிம் ஸுராதிம் மகாதிம் பவாதிம்
    ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    ஜகன் மோஹனீயம் து வாக் வாதினீயம்
    ஸூஹ்ருத் போஷிணீ சத்ரு ஸம் ஹாரனீயம்
    வசஸ்தம்பனீயம் கிமுச்சாடனீயம்
    ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    இயம் ஸ்வர்கதாத்ரி புன : கல்பவல்லீ
    மனோஜாம்ஸ்து காமான்ய யதார்த்தம் ப்ரகுர்யாத்
    ததாதே க்ருதார்த்தா பவந்தீதி நித்யம்
    ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    ஸூராபானமத்தா ஸபக்தானுரக்தா
    லஸத்பூத சித்தே சதாவிர்ப வஸ்தே
    ஜபத்யான பூஜா ஸுதா கௌதபங்கா
    ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    சிதானந்த கந்தம் ஹஸன்மன் மந்தம்
    சரச்சந்த்ர கோடி ப்ரபாபுஞ்ஜ பிம்பம்
    முனீனாம் கவீனாம் ஹ்ருதி த்யோதயந்தம்
    ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    மஹாமேக காளீ ஸுரக்தாப சுப்ரா
    கதாசித்விசித்ரா க்ருதிர் யோகமாயா
    ந பாலா ந வ்ருத்தா ந காமாதுராபி
    ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    க்ஷமஸ்வாபராதம் மஹாகுப்த பாவம்
    மயா லோகமத்யே ப்ரகாத சாக்ருதம் யத்
    தவ த்யான பூஜேன சாபல்ய பாவாத்
    ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
    யதி த்யானயுக்தம் படேத்யோ மனுஷ்யஸ்
    ததா ஸர்வ லோகே விசா லோ ப வேச்ச
    ம்ருஹே சாஷ்டஸித்திர் ம்ருதே சாபி முக்திஸ்
    ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. அன்னை ஸ்ரீ மதுரகாளி எவராலும், எதனாலும் நிர்ணயம் செய்ய முடியாத நிகரில்லாதவளாக, அவளுக்கு நிகர் அவளாகவே
    இருக்கிறாள். புண்யத்தினுடைய பெருமையே அம்பாள்தான். புண்யம் செய்தால் அம்பாளை அடைய முடியும், நல்லவற்றைக் கேட்டலும், செய்தாலும் அம்பாளை அடைய முடியும். பகவத் பாதாள், ஆசார்யாள் அம்பாளின் திரு நாமத்தை வர்ணித்திருக்கிறார்கள். அவதாரத்தையே ச்லோகம் சொல்வதாக இருக்கிறது. பாதம் பற்றிவிட்டால் ஒரு போதும் பிரியாமல் பார்த்து காத்திடுவாள்.சிரம் சாய்க்க நாளும் வந்து அன்றாட வாழ்க்கையில் திருவிளக்கின் சுடராக ஜொலித்து நிற்பாள். அன்னையின் நாமாவளியால் ப்ரீதிக்கு உகந்தவராக ஆக சக்தியை உருவாக்கிக் கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறாள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  50. ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
    மஹா சிம்ஹ வாஹினி !
    மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
    தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
    ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி

    ReplyDelete
  51. தாயே, உன்னிடம் வாத்ஸல்யமுள்ளவருக்கு அருளை மழையாக பொழி. நாள்தோறும் குலம் காக்கும் அன்னை ஸ்ரீ மதுரகாளி, ஸர்வ சத்ரு வினாசினி, சதுர்புஜே பரமேச்வரீயை, அறிந்தவர்க்கு துணையாகி மனஸை நடுநிலையாய், நிஷ்பக்ஷபாதமாய் வைத்துக்கொண்டு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் துதிப்போர்க்கு தாயாகி பரிவோடு எக்காலும் காத்திருக்கும் தாயே உந்தன் மலர்ப்பாதம் போற்றி போற்றி. அம்பாள் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்து பரவசத்தோடு கைகூப்பி குல தெய்வ தரிசனம் செய்துவிட்டு யார் பூஜித்தாலும் பேதமின்றி வரங்களை அள்ளிக் கொடுப்பவள். வெள்ளி க்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். பில்லி சூன்யம் பாதிப்பு அகல வழிபடப் பலன் உணரலாம். அன்னை ஸ்ரீ மதுரகாளி திருவருள் பெற்று மனம் அமைதி அடைய வழிபாடு பரிபூரணமாக உதவும். கோவில் வாசலில் காவல் தெய்வம் உள்ளது. மன சஞ்சலங்களையெல்லாம் நீங்க ப்ரார்த்திக்கலாம். அன்னை ஸ்ரீ மதுரகாளி கனவில் வந்தால் அது நிஜமே அன்றி கனவல்ல. உள்ளேயிருக்கும் நமது ஆற்றலையெல்லாம் வெளிக்கொணரும் சக்தி அம்பாளுக்கு மட்டுந்தான் உள்ளது. அம்பாளின் வலிமை சக்தி படைத்தது. வியாதிகளை போக்குபவள், காப்பாற்றுகிறவள்.

    ReplyDelete
  52. அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின், ஆறு மாதங்கள் கழிந்த்து, அதிகாலை திவ்யமான விஸ்வரூப தெய்வீக நெஞ்சுருகும் ரம்யமான தரிசனம் ஆத்ம சுத்தி தந்திடும். மனதிற்கு மகிழ்ச்சி தரும், அருமையான மாற்றங்களைத் தந்திடும் தரிசனம். கோரும் வரம் தந்திடும் தரிசனம். அப்படியே மெய்மறந்து போய்விடும். என்னை ஆளும் தெய்வம். இதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. உரிய நேரத்தில் தெய்வத்தின் தீர்க தரிசனத்தை எண்ணி வியந்து போனேன். அடுத்த கணத்தில் அன்றைய தினம் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தாள். பற்றுடை அடியவர்க்கு எளியவள். எத்தனை பெரிய பாக்யம். பிறகென்ன, அன்னை ஸ்ரீ மதுரகாளி தரிசனம் காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  53. அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின், ஆறு மாதங்கள் கழிந்த்து, அதிகாலை திவ்யமான விஸ்வரூப தெய்வீக நெஞ்சுருகும் ரம்யமான தரிசனம் ஆத்ம சுத்தி தந்திடும். மனதிற்கு மகிழ்ச்சி தரும், அருமையான மாற்றங்களைத் தந்திடும் தரிசனம். கோரும் வரம் தந்திடும் தரிசனம். அப்படியே மெய்மறந்து போய்விடும். என்னை ஆளும் தெய்வம். இதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. உரிய நேரத்தில் தெய்வத்தின் தீர்க தரிசனத்தை எண்ணி வியந்து போனேன். அடுத்த கணத்தில் அன்றைய தினம் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தாள். பற்றுடை அடியவர்க்கு எளியவள். எத்தனை பெரிய பாக்யம். பிறகென்ன, அன்னை ஸ்ரீ மதுரகாளி தரிசனம் காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  54. அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் நாமம் சதாசர்வ காலமும் பக்குவமாய் பக்தர்ஸ்ரத்தையோடு சொல்லி, பக்தரும் பயபக்தியுடன் நீங்கதான் அருள்புரியணும் என்று சற்று கேட்டு தரிசிக்க, வாஞ்சையோடு வாழ்த்தி நம்மை வாழ வைப்பவள். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் நல்வினைக்காக அம்மையை வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள். இதெல்லாம் அவள் திருவடிகளின் பெருமை. அம்பாளின் திருவடிகளையே எப்போதும் போற்றியபடி உள்ளவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். இனி ஒரு நொடிப் பொழுதும் ஸம்ஸார துக்கம் மூலம் வருந்தமாட்டார்கள். அவளைக் கண்டால் மனநிம்மதி. அம்பாளின் நாமத்தை ஜெபித்து வந்தால் எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும். நாமத்தின் மகத்துவம். ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் பக்தைக்கு அதீத மகிழ்ச்சி. அரளிப் பூவை மாலையைத் தொடுத்து அனுக்கிரகத்திற்காக முன் வைத்து சமர்பித்தாள். சாத்தியபோது கச்சிதமாக அளவெடுத்து தொடுத்தது போல் அமைந்திருந்தது. எல்லா பக்தர்களுக்கும் அது ஆனந்தமாக இருந்தது. தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்தாள். பக்தைக்கு அந்த ஆனந்தம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. பக்தைகளின் மனபூர்வமான பக்திக்கு அங்கீகாரம் அளித்தது போன்று அமைந்தது இந்த சம்பவம்.

    ReplyDelete
  55. அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் நாமம் சதாசர்வ காலமும் பக்குவமாய் பக்தர்ஸ்ரத்தையோடு சொல்லி, பக்தரும் பயபக்தியுடன் நீங்கதான் அருள்புரியணும் என்று சற்று கேட்டு தரிசிக்க, வாஞ்சையோடு வாழ்த்தி நம்மை வாழ வைப்பவள். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் நல்வினைக்காக அம்மையை வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள். இதெல்லாம் அவள் திருவடிகளின் பெருமை. அம்பாளின் திருவடிகளையே எப்போதும் போற்றியபடி உள்ளவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். இனி ஒரு நொடிப் பொழுதும் ஸம்ஸார துக்கம் மூலம் வருந்தமாட்டார்கள். அவளைக் கண்டால் மனநிம்மதி. அம்பாளின் நாமத்தை ஜெபித்து வந்தால் எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும். நாமத்தின் மகத்துவம். ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் பக்தைக்கு அதீத மகிழ்ச்சி. அரளிப் பூவை மாலையைத் தொடுத்து அனுக்கிரகத்திற்காக முன் வைத்து சமர்பித்தாள். சாத்தியபோது கச்சிதமாக அளவெடுத்து தொடுத்தது போல் அமைந்திருந்தது. எல்லா பக்தர்களுக்கும் அது ஆனந்தமாக இருந்தது. தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்தாள். பக்தைக்கு அந்த ஆனந்தம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. பக்தைகளின் மனபூர்வமான பக்திக்கு அங்கீகாரம் அளித்தது போன்று அமைந்தது இந்த சம்பவம்.

    ReplyDelete
  56. அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாள்தான் சகலமும். எல்லா தோற்ற ங்களிலும் அவளேதான் உள்ளாள். மனசைச் செலுத்தி வணங்க ஒளியைக் காணலாம். அகந்தை கொள்ளும் அரக்கர்களை, இறங்கி வந்து ஓர் வடிவெடுத்து த்வம்சம் செய்ய, அழிக்கவும் தவற மாட்டாள். அன்னை என்று உலகுக்கு உணர்த்தவே இந்த செயல்கள். அம்பிகை ஸ்ரீ மதுரகாளி பார்வை சக்தியுடையது. அதான் ஸ்ரீ மதுரகாளியாக தோன்றினாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும். அதிசயம் என்னவென்றால், அனைவரையும் அவரவர் தோற்றத்தில் இருந்த படி பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்தவள் அன்னை. வியப்பில் ஆழ்த்தும் இது போல ஆயிரம் கதைகள் சொல்லலாம். சன்னதியில் இருந்து பார்க்கும் போது அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. சாந்த கோலத்தில் தனிசன்னதியில் இருக்கிறாள். இவளை “ஸ்ரீ மதுரகாளிகாம்பாள்” என்று அழைக்கிறார்கள். அமுதைப் பொழிந்து கொண்டிருக்கிறாள்.
    இதிலிருந்து என்ன தெரிகிறது. அம்பாள்தான் சகலமும். நல்ல மனத்தோடு கேட்கும் வரத்தைப் பூர்த்தி செய்பவள். அவள் இருந்தால் திருவருள் கிடைக்கும். அங்கு வரும் மகான்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தரிசனம் தரவில்லை என்ற கவலை
    இல்லை. பக்தியில் குறை வந்து விட்டதா என்ற கவலை
    இல்லை. சற்று நேரத்தில் தரிசனம் தந்து வாழ வைப்பவள்.
    எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  57. அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாள்தான் சகலமும். எல்லா தோற்ற ங்களிலும் அவளேதான் உள்ளாள். மனசைச் செலுத்தி வணங்க ஒளியைக் காணலாம். அகந்தை கொள்ளும் அரக்கர்களை, இறங்கி வந்து ஓர் வடிவெடுத்து த்வம்சம் செய்ய, அழிக்கவும் தவற மாட்டாள். அன்னை என்று உலகுக்கு உணர்த்தவே இந்த செயல்கள். அம்பிகை ஸ்ரீ மதுரகாளி பார்வை சக்தியுடையது. அதான் ஸ்ரீ மதுரகாளியாக தோன்றினாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும். அதிசயம் என்னவென்றால், அனைவரையும் அவரவர் தோற்றத்தில் இருந்த படி பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்தவள் அன்னை. வியப்பில் ஆழ்த்தும் இது போல ஆயிரம் கதைகள் சொல்லலாம். சன்னதியில் இருந்து பார்க்கும் போது அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. சாந்த கோலத்தில் தனிசன்னதியில் இருக்கிறாள். இவளை “ஸ்ரீ மதுரகாளிகாம்பாள்” என்று அழைக்கிறார்கள். அமுதைப் பொழிந்து கொண்டிருக்கிறாள்.
    இதிலிருந்து என்ன தெரிகிறது. அம்பாள்தான் சகலமும். நல்ல மனத்தோடு கேட்கும் வரத்தைப் பூர்த்தி செய்பவள். அவள் இருந்தால் திருவருள் கிடைக்கும். அங்கு வரும் மகான்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தரிசனம் தரவில்லை என்ற கவலை
    இல்லை. பக்தியில் குறை வந்து விட்டதா என்ற கவலை
    இல்லை. சற்று நேரத்தில் தரிசனம் தந்து வாழ வைப்பவள்.
    எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  58. அம்பாள் நம் ஹ்ருதயத்துள் சூக்ஷ்மமாக வசிக்கிறாள். இதை கருத்தில் கொள்ள வேண்டும். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அன்னை ஸ்ரீ மதுரகாளி வழிபாடு செய்வதால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    ReplyDelete
  59. ஸ்ரீவித்யா உபாஸனைமுறையை அனுஷ்டித்து அம்பாள் ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ஸ்ரீஷோடசாக்ஷரீ வித்யா மந்த்ரம் அம்பாளை உபாஸிக்க உதவும். ஏகாந்த நிலை பெற உதவும். மகரிஷிகளின் அருள் சக்தி வேண்டும். வேதனை, சங்கடம் இருக்காது.தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். அதிக பக்ஷமாக கொஞ்சங்கூட மனசை உறுத்தாமல் ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கும். சாஸ்த்ரங்களின் தனிப் பெருமையை ச்லோகரூபமாக அப்யாஸமாகக் கற்றுக்கொள்ளலாம். பக்தர்களை பக்தி ரூபத்தில் சரணடைந்தோரின் மனமிரங்கி அருளும் கருணாமூர்த்தி அன்னை ஸ்ரீ மதுரகாளி. நம்முடைய மனஸில் ப்ரேமை எழும்பும். அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும்.அம்பாளை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை. இத்தலம், அன்னை ஸ்ரீ மதுரகாளி மாதாவின் அவதாரம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருள்பாலிக்கிறாள். திருமணத்தடை, கல்விக் குறைபாடு, வேலை வாய்ப்பின்மை, குழந்தை பேறு இல்லாமை, கணவன்–மனைவி ஒற்றுமையின்மை, தொழிலில் சரிவு போன்ற கிரகங்களின் சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் களைந்து புதிய வாழ்க்கை அளிப்பதில் தன்னிகரற்று விளங்குகிறாள். பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.

    ReplyDelete
  60. ஸ்ரீவித்யா உபாஸனைமுறையை அனுஷ்டித்து அம்பாள் ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ஸ்ரீஷோடசாக்ஷரீ வித்யா மந்த்ரம் அம்பாளை உபாஸிக்க உதவும். ஏகாந்த நிலை பெற உதவும். மகரிஷிகளின் அருள் சக்தி வேண்டும். வேதனை, சங்கடம் இருக்காது.தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். அதிக பக்ஷமாக கொஞ்சங்கூட மனசை உறுத்தாமல் ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கும். சாஸ்த்ரங்களின் தனிப் பெருமையை ச்லோகரூபமாக அப்யாஸமாகக் கற்றுக்கொள்ளலாம். பக்தர்களை பக்தி ரூபத்தில் சரணடைந்தோரின் மனமிரங்கி அருளும் கருணாமூர்த்தி அன்னை ஸ்ரீ மதுரகாளி. நம்முடைய மனஸில் ப்ரேமை எழும்பும். அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும்.அம்பாளை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை. இத்தலம், அன்னை ஸ்ரீ மதுரகாளி மாதாவின் அவதாரம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருள்பாலிக்கிறாள். திருமணத்தடை, கல்விக் குறைபாடு, வேலை வாய்ப்பின்மை, குழந்தை பேறு இல்லாமை, கணவன்–மனைவி ஒற்றுமையின்மை, தொழிலில் சரிவு போன்ற கிரகங்களின் சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் களைந்து புதிய வாழ்க்கை அளிப்பதில் தன்னிகரற்று விளங்குகிறாள். பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.

    ReplyDelete
  61. அம்பாளை நிதம் வாட்டம் நீக்கிடும், அருள் பொழி முகமும், தரும் துணையும் கண்டிட, அனைவரும் தவற மாட்டார்கள். புண்ணிய தோற்றம் எதில் உண்டு குறைவு!! சர்வலோகம் காக்கும்
    தாயே சரணம். நெஞ்சத்தில் நீ இதயக்கனி ஆள்கின்றாய் தரணி.
    இத்தலத்திற்கு ஒரு காலத்தில் நடந்து போகலாம். புஷ்பக விமானத்தில் ஆண்டுதோறும் வீதி உலா வருவாள். உலகில் ஒன்றும் நிலையில்லை. மனத்தில் சரணாகதி அடைய பத்திரமாகப் பாதுகாப்பேன் என்றாள். அருளை உனக்கு நான் தருகிறேன். அழியாதது, அழிவில்லாதது, என்றாள். கண்முன் காட்சி, என் நாமம் மிகச் சிறந்தது.இந்த மந்திரம் தான் எனக்கும் தெரியுமே, இதில் ரகசியம் என்ன, என்று நினைப்பதற்குள், எப்படிப்பட்ட மகாமந்திரம். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா! என்றாள். அதைத் திரும்பத் திரும்ப இரவு பகல் பாராமல் நாள்தோறும் சொல்லிக்கொண்டிரு. அதுவே உனக்கு அபயம் அளிக்கும்என்றாள். அதுதான் தாரக மந்திரமுமாகும். தரிசனம் காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  62. அம்பாளை நிதம் வாட்டம் நீக்கிடும், அருள் பொழி முகமும், தரும் துணையும் கண்டிட, அனைவரும் தவற மாட்டார்கள். புண்ணிய தோற்றம் எதில் உண்டு குறைவு!! சர்வலோகம் காக்கும்
    தாயே சரணம். நெஞ்சத்தில் நீ இதயக்கனி ஆள்கின்றாய் தரணி.
    இத்தலத்திற்கு ஒரு காலத்தில் நடந்து போகலாம். புஷ்பக விமானத்தில் ஆண்டுதோறும் வீதி உலா வருவாள். உலகில் ஒன்றும் நிலையில்லை. மனத்தில் சரணாகதி அடைய பத்திரமாகப் பாதுகாப்பேன் என்றாள். அருளை உனக்கு நான் தருகிறேன். அழியாதது, அழிவில்லாதது, என்றாள். கண்முன் காட்சி, என் நாமம் மிகச் சிறந்தது.இந்த மந்திரம் தான் எனக்கும் தெரியுமே, இதில் ரகசியம் என்ன, என்று நினைப்பதற்குள், எப்படிப்பட்ட மகாமந்திரம். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா! என்றாள். அதைத் திரும்பத் திரும்ப இரவு பகல் பாராமல் நாள்தோறும் சொல்லிக்கொண்டிரு. அதுவே உனக்கு அபயம் அளிக்கும்என்றாள். அதுதான் தாரக மந்திரமுமாகும். தரிசனம் காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  63. Balasubramanian Nannilam Ranganathan
    Balasubramanian Nannilam Ranganathan 5:01am Aug 3
    பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
    காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
    ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
    தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
    வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
    நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
    பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
    கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
    காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
    கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
    அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
    நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
    இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
    போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
    போற்றி போற்றி பராசக்தி காளிகாம்பாள் போற்றி
    போற்றி போற்றி தேவியே போற்றி
    போற்றி போற்றி ஸ்ரீ மதுரகாளி அன்னையே போற்றி

    ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்

    ReplyDelete
  64. காளிகாம்பாள் கவசம்

    முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
    முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
    பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
    பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

    காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
    காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
    கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
    காத்தருள்வாயே கற்பக கணபதியே

    அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
    ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
    இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
    ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
    உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
    ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
    எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
    ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
    ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
    ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
    ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
    ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

    அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
    அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
    கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
    கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
    காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
    கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
    பாரதிபாடிய பரமகல்யாணியே
    வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
    வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
    பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
    பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
    மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
    சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
    சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
    எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
    எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
    குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
    சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
    சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
    வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
    கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
    விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
    நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
    பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
    மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
    நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
    நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
    தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
    வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
    கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

    ReplyDelete
  65. ஸரியாகச் சொன்னால் அம்பாள் இப்படி ரூபம் எடுத்துக்கொண்டு இந்த க்ரியாலோகத்தில் இத்தனை செய்கிறாள். என்றால் நிதர்சனமான உண்மை. ஹாய்யாக இருந்துவிடமால் கருணைக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும். அழகான ஸ்துதி பண்ணி த்ருப்தியாக இருக்க, அநுக்ரஹதற்காக அனந்த கோடி நமஸ்காரமும் பண்ணத்தான் வேண்டும். இந்த நமஸ்காரம் தான் நமக்கு மஹா பெரிய செல்வம். அவளையே நமஸ்காரம் பண்ணி ப்ரார்த்தித்துக் கொண்டேன். நாம் ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது. வேறு எதுவும் வேண்டாம், அம்மா உனக்குப் பண்ணும் நமஸ்காரமே செல்வநாயகியான நீ எனக்குக் கொடுக்கும் பெரிய செல்வம். அதைத் தவிர வேறே எதுவும் வேண்டாம். மாதா, இந்த நமஸ்காரஸ்ரத்தை தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை. குணத்தினாலும் சரீரத்தினாலும் சேர்ந்து, ஒன்றையொன்று பரிசுத்தி பண்ணிக் கொள்ளும் முறையில், நமஸ்காரமே பெரிய செல்வம்.

    ReplyDelete
  66. ஸரியாகச் சொன்னால் அம்பாள் இப்படி ரூபம் எடுத்துக்கொண்டு இந்த க்ரியாலோகத்தில் இத்தனை செய்கிறாள். என்றால் நிதர்சனமான உண்மை. ஹாய்யாக இருந்துவிடமால் கருணைக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும். அழகான ஸ்துதி பண்ணி த்ருப்தியாக இருக்க, அநுக்ரஹதற்காக அனந்த கோடி நமஸ்காரமும் பண்ணத்தான் வேண்டும். இந்த நமஸ்காரம் தான் நமக்கு மஹா பெரிய செல்வம். அவளையே நமஸ்காரம் பண்ணி ப்ரார்த்தித்துக் கொண்டேன். நாம் ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது. வேறு எதுவும் வேண்டாம், அம்மா உனக்குப் பண்ணும் நமஸ்காரமே செல்வநாயகியான நீ எனக்குக் கொடுக்கும் பெரிய செல்வம். அதைத் தவிர வேறே எதுவும் வேண்டாம். மாதா, இந்த நமஸ்காரஸ்ரத்தை தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை. குணத்தினாலும் சரீரத்தினாலும் சேர்ந்து, ஒன்றையொன்று பரிசுத்தி பண்ணிக் கொள்ளும் முறையில், நமஸ்காரமே பெரிய செல்வம்.

    ReplyDelete
  67. ஆலயம் வடக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம். பக்தர்களின் தீராத நம்பிக்கை அகிலாண்ட நாயகி ஸ்ரீ மதுரகாளி அன்னையை வணங்கினால் வணங்கினால் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் தீரும்.
    ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் அம்பாளின் தனிச் சன்னிதி.
    அம்மன் ஸ்ரீ மதுரகாளி அற்புதமாக காட்சியளிக்கிறாள். வந்த பிணி, வரும் பிணிகளை நீக்கும் சக்தி படைத்தவளாக விளங்குகிறாள்.

    ReplyDelete
  68. இத்தல சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், இத்தலம் வந்து ஆலயத் திருக்குள தீர்த்தத்தில் நீராடி அம்பாளைத் தரிசித்தார் என கூறப்படுகிறது. பக்தியுடன் பாசத்துடன் நாடி வரும் அன்பரை காக்கின்ற பரிவு தான் என்ன, புகழும், வளமும், தெய்வச் செயல்சேர்க்கும் ஆலயமாகவும் இது போற்றப்படுகிறது. எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும். பகவானுடைய கோட்பாடே யாரும் கர்மத்தை விட்டுவிடலாகாது. அவரவர் கடமையை நன்கு செய்துகொண்டிருக்கவேண்டும். மனது உறுதிபெற்றவனுக்கே தியானம் செய்யவும் முடியும். பக்தி ச்ரத்தையுடன் தினம் கரம் கூப்பி வேண்டித் தொழுவோர்க்கு துணை உணர்வு வளரும். எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கலாம். விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி அம்பாளின் தரிசனத்தில் திளைத்திருந்தார்கள். பக்தர்கள் வாங்கி வந்திருந்த ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் மலை போல் குவிந்திருந்தன. மக்களுக்குத் துன்பம் வருங்கால், அதை நீக்க அவதரித்தவள். இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன், என்பதாக அனைவரையும் பார்த்தாளோ, பக்தர்கள் நெகிழ்ந்து போனார்கள். மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் பக்தரிடம் இருந்து அம்பாளின் பிரசாதம் என்று குரல் கேட்டனர். சஞ்சலம் தீர திருநீறு அற்புதமான மருந்தாகும். தரிசனம் காணக்காணப் புண்ணியம்.

    ReplyDelete
  69. அம்பாளின் நாமம் உரைத்திட எந்நாளும் உயர்வு தரும். அமுதமாய் கருணை பொழி திருநாமமே. அம்பாளை பார்க்காமல் அம்பாளை வேண்டிடும் கவலையடைந்த அவர்கள்மனதிற்கில்லை என்றும் பயமே. கருணையில் தரும் அனுகிரஹமே. காத்து நிற்கும் என்றும் அகிலாண்ட நாயகி ஸ்ரீ மதுரகாளி திருக்கரமே. காளியம்மனின் மற்றொரு தோற்றம்தான் ஸ்ரீ மதுரகாளி அன்னை என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. அம்பாளை குறித்த வரலாற்றுத் தகவல்கள், காளி, துர்க்கை ஒவ்வொன்றும் வேறாக இருந்தாலும் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் மதியம் 10 மணிக்கு அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இது தவிர, நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
    இந்த அம்மனை வணங்கினால் குறைகள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த அம்மனை வழிபட்டு மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பிடத்தைப் பெற முடியும். அம்மனை வணங்கி நற்பலன்களைப் பெறலாம். பக்தர்கள் அரக்கனை அழித்தது ஸ்ரீ மதுரகாளி என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர்.

    ReplyDelete
  70. அகிலாண்ட நாயகி ஸ்ரீ மதுரகாளி அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிலும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள். பண்டைய காலத்திலிருந்து சைவ வழிபாடு நடை பெறுகிறது. பக்தர்கள், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து நலம் பெற்று செல்கிறார்கள். பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து அன்னையை வழிபட்டு பூரணகுணம் பெற்று செல்வதை காணமுடிகிறது. தாயே, ஒளி மயமான ரூபத்தை, உன்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். அன்னையே உன் கருணைதான் என்ன, வியத்தற்குரிய தன்மையது. உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன். அம்பிகை பக்தர்கள் காவ்யங்களைக் கேட்டு ரசிப்பவள்.மனதில் நிம்மதியும் நிறைவும் பெற, நமக்காகவே திவ்ய ஸ்வரூபம் கொண்ட ஸ்ரீ மதுரகாளியாக காட்சி கொடுக்கிறாள்.

    ReplyDelete
  71. பக்தர் தரிசனம் செய்துகொண்டிருந்தார். ஒரு பெண்மணி, மிக மதுரமாக பாடிக்கொண்டிருந்தார். வெகு சிலபேர் மட்டுமே இருந்தனர். ஆனந்தமாக விளங்குபவளே ஏதாவது வழி காட்டணும். எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். என் மனம் பக்தி செய்வதோ உன் நாமம். விடாமல் ச்ரத்தையுடன் செய்து வந்தேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பாளோட ஒரு வரப்ரஸாதம் எல்லாம் அம்பாளோட க்ருபை. தனக்கு கிடைத்த ஒரு சந்தோஷம்அம்பாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு ப்ரசாதம் வாங்கிக்கொண்டு, வீடு திரும்ப நினைத்தவர்கள், அங்கேயே நின்றுவிட்டனர். நமக்கு சந்தோஷம் அளிப்பவள் ஈச்வரீ.

    ReplyDelete
  72. இன்று காலைத் திள்டிரென்று ஒரு நினைவு. சத்தமில்லா நிசப்தம். அவள் அருகில், வேறொரு பெண், காமாட்சி, காமகோடி பீடவாஹினி. அம்மனை சரண் புகுவதில் சந்தோஷத்தத் தவிர வேறு என்ன கிடைக்கும். இதயத்தில் இடம் பிடித்தவள். அவளெ ரட்சிப்பவள்.அம்பாளோட க்ருபை நினைக்க ஆரம்பிக்கும் போதே வரும் நினைவுகள் கருணை. இந்த நற்செயலை, அனன்ய சரண்ய; சரணம் பிரபத்யே. பூர்வ ஜன்ம பந்தம். தாயாரிடம் கேட்ட சொல்லைத் தயங்காமல் நிறைவேற்றுவதில் அதிசயமே இல்லை. சர்க்கரைப் பொங்கலை செய்து சம்ர்ப்பிக்க வேண்டும் அல்லவா! அனைத்தையும் நடத்திட ஆசிர்வதித்து அம்பாளோட க்ருபை வேண்டும். இரண்டற ஒந்றாகக் கலப்பது அம்பாளோட ஆசிர்வாதம். அம்பா வந்தனை செய்யக் கூடியவளாக இருக்கிறாள். அவள் இந்த லோகத்தைக் காப்பாற்றக் கூடியவள். உறுதுணையாக இருப்பாள், வழிபட்டால் அழிவே கிடையாது என்பதாக கூறப்படுகிறது. அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  73. இன்று காலைத் திள்டிரென்று ஒரு நினைவு. சத்தமில்லா நிசப்தம். அவள் அருகில், வேறொரு பெண், காமாட்சி, காமகோடி பீடவாஹினி. அம்மனை சரண் புகுவதில் சந்தோஷத்தத் தவிர வேறு என்ன கிடைக்கும். இதயத்தில் இடம் பிடித்தவள். அவளெ ரட்சிப்பவள்.அம்பாளோட க்ருபை நினைக்க ஆரம்பிக்கும் போதே வரும் நினைவுகள் கருணை. இந்த நற்செயலை, அனன்ய சரண்ய; சரணம் பிரபத்யே. பூர்வ ஜன்ம பந்தம். தாயாரிடம் கேட்ட சொல்லைத் தயங்காமல் நிறைவேற்றுவதில் அதிசயமே இல்லை. சர்க்கரைப் பொங்கலை செய்து சம்ர்ப்பிக்க வேண்டும் அல்லவா! அனைத்தையும் நடத்திட ஆசிர்வதித்து அம்பாளோட க்ருபை வேண்டும். இரண்டற ஒந்றாகக் கலப்பது அம்பாளோட ஆசிர்வாதம். அம்பா வந்தனை செய்யக் கூடியவளாக இருக்கிறாள். அவள் இந்த லோகத்தைக் காப்பாற்றக் கூடியவள். உறுதுணையாக இருப்பாள், வழிபட்டால் அழிவே கிடையாது என்பதாக கூறப்படுகிறது. அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  74. ஸ்ரீ மதுரகாளி தாயின் மனம் வள்ளல் தரும் குணம். எந்நேரமும் அருளும் தெய்வீகம். துணை வந்து வாழ்த்தி நிற்கும் அன்பு முகம். வினையகற்றி சுபம் சேர்பாள். பக்தர்களுக்கு நலமும், வளமும், அருளாட்சி வழங்கிகிறாள். ஆற்றல் மிக்க சக்தியாக ஸ்ரீ மதுரகாளி அன்னை விளங்குகிறாள்.

    ReplyDelete
  75. அவள் நாமம், க்ஷேமங்கள் வேண்டி, நிதம் சொல்ல நலம் சேரும். நம் கவலையெல்லாம் ஒரு நொடியில் பறந்தோடும். வித விதமாய் மலராலே அலங்காரம். வேறெங்கும் காணாத வைபோகம். என்றும் பூரணமாய் விளங்குகின்ற அன்னை தரிசனம் கிடைக்க இந்த காட்சி போதுமே வேரு ஏதும் தேவையில்லை. நெஞ்சில்பரிபாலனம் செய்யும் தாயே, என்றும் பக்தர்களையுடையவளே, எனக்குத் தானே முன் வந்து அருளளித்த தாயே, நீ எங்கும் நிறைந்திருப்பதால் ஏதும் தோன்றவில்லை. எல்லாருக்கும் தெரிந்த உண்மை. நம்பிக்கை வளர நான் நம்பிக்கையோடு ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  76. அவள் நாமம், க்ஷேமங்கள் வேண்டி, நிதம் சொல்ல நலம் சேரும். நம் கவலையெல்லாம் ஒரு நொடியில் பறந்தோடும். வித விதமாய் மலராலே அலங்காரம். வேறெங்கும் காணாத வைபோகம். என்றும் பூரணமாய் விளங்குகின்ற அன்னை தரிசனம் கிடைக்க இந்த காட்சி போதுமே வேரு ஏதும் தேவையில்லை. நெஞ்சில்பரிபாலனம் செய்யும் தாயே, என்றும் பக்தர்களையுடையவளே, எனக்குத் தானே முன் வந்து அருளளித்த தாயே, நீ எங்கும் நிறைந்திருப்பதால் ஏதும் தோன்றவில்லை. எல்லாருக்கும் தெரிந்த உண்மை. நம்பிக்கை வளர நான் நம்பிக்கையோடு ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  77. ஸ்ரீ மதுரகாளியின் அருளின் வடிவாகி அவள் உறவாகி இரவு பகலாக காக்கும் நம் துணையாகி நோய் நொடிகள் தீர்க்கும் மருந்தாகி, தீவினைகள் துயரக் கடலில் மூழ்கி, அதனின்று காப்பது, மாய்க்கும் அருளாகி அவள் அருளின் முதலாகி இருக்கும் அவள் நாமம் ஜெயம் ஜெயமே. குலம் திருப்தியாயிருக்க எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒன்ரும் இல்லை. ஜனங்களை ரொம்பவும் வசீகரம் செய்யும் தாயே, நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன். நம் அகத்தை விளங்க வைக்கும் கிருஹலக்ஷ்மி. நாம் கவனிக்கும்போது ஆதாரங்களிலிருந்து நம்பிக்கை நிஜம்தான் என்று சொல்லப்படுகிறது. நிச்சயப்படுத்தும் அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  78. கண்களின் பார்வையை ஸ்ரீ மதுரகாளியின் மேல் நிரந்தரமாய் நிலை நிறுத்தி அம்பாளின் அபிசேஷக க்ஷீரத்தைப் பானம் பண்ணி நீடிக்காத துன்பமும் நீங்காத இன்பமும் ஸ்ரீ மதுரகாளியின் இறைநிலை தியானத்தால்தான் பெறமுடியும். நமக்கு தீவிரமான பக்தி இருக்க வேண்டும். ஸ்ரீ மதுரகாளியின்பால் பற்றுள்ளவர்கள் கொள்ளும் ஆவல், கோவிலில் தர்சனம் பண்ணி அவள்பால் தன்னை ஒப்படைப்பவன் நிச்சயமாக அவளை அடைகின்றான்.

    ReplyDelete
  79. அம்பிகை மட்டுந்தான் சகல தகுதிகளும் கொண்டவள். வண்ங்குபவர்களுக்கு எளிமையும் அழகையும் கொண்டவளாக இருக்கிறாள். ஸ்ரீ மதுரகாளிச்வரீ மிக்க உயர்ந்த நிலையில் உள்ளவள். அம்பாளை பக்தியோடு அண்டினவர்க்கு அரும்பெரும் கருணையை அளிக்க வல்லவள். நாம் உண்மையான பக்தியுடன்
    அவளை வணங்கினால் நமக்கு க்ருபா கடாக்ஷம் தர வல்லவள்.
    ஸர்வலோக வசங்கரீ. நினைத்திட உடனே ஓடி வருபவள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  80. இன்று அதிகாலை நான் பார்த்த காட்சியை எப்படி வர்ணிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அற்புதமான தெளிவான எல்லாரையும் ஆசி கூறியவண்ணம் இருக்கும் காட்சி. பேசாமல் இந்த கனவு கண்டவுடன்அங்கேயே ஒன்றும் சொல்லாமல் புன்முறுவலுடன் ஓரு நமஸ்காரமும் செய்தேன். ஸ்ரீ மதுரகாளி தேவி சரணம். மகேசனின் சக்தி இவள். எதையும் அடக்க வல்லவள். சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே.

    ReplyDelete
  81. குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள். குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில்
    ( காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம). சுத்தமான பசு நெய்விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும்.
    இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்.

    ReplyDelete
  82. தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு அன்னை ஸ்ரீ மதுரகாளி கோயில். இந்தத் தமிழ் தேசத்தில் அவள் வேறெந்த ஸ்வாமிக்கும் இணை இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து கருணை எனும் மழை பொழிகிறாள். பக்தர்களை ஒரேயடியாகக் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதலாவதாக இருக்கிறாள். தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தூண்டும் அன்னை. அன்னை ஸ்ரீ மதுரகாளி யிடம் பக்தி உண்டாகவேண்டும் என்று எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள். அன்னையிடம் பூஜித்து அவள் அனுக்ரஹத்தைப் பெற்றுக் கொண்டால்தான் காரியம் விக்னமின்றி நடக்கும். அன்னை அனுக்ரஹம் இருந்தால்தான் காரியம் தங்கு தடையின்றி லோகத்தில் நடக்கும். அவளைப் ப்ரார்த்தித்து, பூஜை செய்து
    நல்வாழ்வு வாழ்வோம். ஸதாகாலமும் நாம் மனதால் அவளை த்யானித்தால் அவள் ஓடோடி வருவாள். அவளை மனதில் இருத்தி வழிபடல் வேண்டும். ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதை. அவள் நாமாவுக்கு ஒரு சிறப்பு நம் அந்தராத்மாவில் உறைந்திருப்பவள். தினமும் முறைப்படி ஆத்மார்த்தமான பூஜையாலேயே கேட்டதும் உடனுக்குடனே நமக்கு அருள்பவள்.அன்னை அமர்ந்திருக்கும் அருகில் உற்சவ விக்ரகம் இருக்கும். அன்னையின் அழகு முகத்தைக் காணும் போதே மனம் குதூகலமடைகிறது. அன்னையின் திருமுகம் அப்படியே மனதில் பதிகிறது. அன்னையை தரிசித்த திருப்தி திரும்பும் போது துயரமெல்லாம் மெல்ல கரைந்து காணாமல் போவது போன்ற உணர்வும் மேலோங்குகிறது. பக்தர்களை லயித்து ஆனந்தம் அளிப்பவள். அம்ருதத்தைத் தாரையாக வர்ஷிப்பவள். சம்சார சாகரத்தில் வீழ்ந்து உழன்று கொண்டிருக்கும் பக்தர்களை கறையேற்றுபவள்.அம்பிகை துர்க்கா என்று பெயர் பெற்ற தேவி; அவளே வாராஹ அவதாரம் காளி. நம் உள்ளத்தில் பக்தியால் செய்யும் யாகத்துக்கும் அவளே காரணமாக இருக்கிறாள். நாம் மட்டும் குழந்தை இல்லை. தன் சக்தியால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகத்துக்குக்கு தாயார். அன்னையின் ஆசியுடன் தரிசனம் பெற அம்பாள் உத்தரவுப்படி அம்மாவுக்கு பணி செய்து கொண்டிருந்தால் போதும்.
    லோகத்தின் கஷ்டத்தைப் பார்த்து, அவர்களுடைய பூர்வ புணயத்திற்காக, நான் அனுபவப்பட்டவரையில், அன்னை வேண்டியதைச் செய்பவள். ஒரு வகையில் கோயில் பூசாரி தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர். வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலி எழுப்பும் பேச்சின் நடுவே தொடர்ந்து பேசும் போது ஒரு லயம். மனிதமனத்துக்கு அமைதி தேடி செய்யபடும் ஒரு வகை சங்கீதக் கலை. ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவம். பக்தர்களின் நம்பிக்கை அன்னை ஸ்ரீ மதுராம்பிகை தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கும் அனைத்து வளங்களையும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம் அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  83. அம்பாளின் பார்வை தனத்தையும் தான்யத்தையும்
    அளிக்க வல்லது. நவக்ரஹம் போன்ற எண்ணிலடங்கா
    கோள்களின் சுழற்சிக்கும் சூலத்தை கரங்களில் தாங்கிய அவள் பார்வை ஒன்றே போதும். பக்தன் முறையிட்டால், நம்முடைய வேதனையை அறிந்து, அதனைக் கேட்டு நேரிடும் துன்பங்கள் தீர்க்கின்றாள். முதலாவதாக அவள் மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். ப்ரார்த்தனைக்காக தாமஸம் செய்யலாமா!! ஒரு சந்தர்ப்பம்கஷ்டம் வந்தாலும் ஒரே வைராக்யமாக மனஸைக் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரையும் தண்டிப்பதில்லை. தாய்க்குமேல் தெய்வமில்லை, அவள் உத்தரவுக்குமேல் சாஸ்த்ரமில்லை என்று சாஸ்த்ரமே சொல்கிறது.எப்படியாவது நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதே அவளின் எண்ணம். அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  84. சக்தி வடிவமாக இருக்கும் அன்னையை வழிபடுபவர்கள் அனைவரும் வீரர்கள். அப்படிப்பட்ட கோஷ்டியைக் கண்டு மகிழ்ச்சி அடைபவள் அன்னை. உலகின் ஸ்ருஷ்டி தத்வமே ஸ்ரீசக்ரத்தில் அமைந்துள்ளதாக மேதைகள் கருத்து
    சொல்லியிருக்கிறார்கள். அன்னையை சிவ-சக்தி ஸ்வரூபமாகச்
    சொல்வோம். சிவனுடைய ஆதாரமாக இருப்பவள். அம்பாள் பக்தர்களைக் காக்க சம்சாரக் கடல் தாண்டி விடலாம். ஸஹஜமான
    கஷ்டம் எனக்கு உண்டாகும். இதிலிருந்து மீளுவதற்கு அம்பாளின் பார்வை எனக்கு தோன்றுகிறது. இதுதான் வழியென்று விரக்தி ஏற்பட்டு தற்செயலாக நான் ஜல மத்தியிலேயே மந்த்ரம் சொல்லி இருக்கிறேன். ஒருவேளை ஸத்கதி கிடைக்க நேரலாம். ப்ரத்யக்ஷமாகவே தெரிவாள் என்று குருட்டு நம்பிக்கை.

    ReplyDelete
  85. https://youtu.be/_FWj4NBGq3I Please listen to Ambal Suprabatham

    ReplyDelete
  86. அன்னை இயற்கையாகவே ப்ரகாசமாக தேன் போன்ற இனிய ஸ்வபாவம் உடையவள். அனைவரையும் காக்கும் அம்பிகை ஸ்ரீ மதுரகாளி ஸாமகானத்தில் மிக்க ப்ரியமுள்ளவள், மனஸுக்கு ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்து நல்ல வழிக்குக் கொண்டு வருபவள், ப்ரீதியடைபவள். அம்பாள் உபாஸனையில் ஸவ்ய, வாம என இரண்டு வழி முறைகள் உண்டு.இரண்டு மார்க்கங்களுக்கும் தலைவி. சமஸ்த திறனும் உடையவள். நம் ஜீவாத்மாவை அர்ப்பணித்து பூஜை செய்து வழிபட்டால் அம்பாள் அதனை ஏற்றுக்கொள்கிறாள், ப்ரீதியடைபவள். நீ என்னை ஸ்மரித்த மாத்ரத்தில் வந்து விடுகிறேன் என்பவள். பூஜை செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆசார்யாள் பூர்வாச்ரம குலமாதா ஆதிசங்கரர் ஸௌந்தர்ய்ஸ்லஹரியில் அழகுபட உரைக்கிறார், வர்ணிக்கிறார்.
    அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  87. அம்பிகை ஸ்ரீ மதுரகாளி எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய முகம் உடையவள். தன்னை ஸ்தோத்ரம் செய்வதை விரும்புபவள்.
    தன்னை பூஜிப்பவரை விரும்புபவள். நாம் தவறு செய்தால் மன்னிப்பளிப்பவள். அரவணைக்கக் கூடிய தன்மையுடையவள். யாவருக்கும் மங்களத்தையே தருபவள். உலகின் அன்னையாக இருந்து உலகைத் தாங்குபவள். அனைத்துக்கும் தாய், துணிச்சல் உடையவள். மிக்க புகழும் கீர்த்தியும் உடையவள்.

    ReplyDelete
  88. ஸ்ரீ மதுரகாளி சாந்தஸ்வரூபிணீ வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவள்யாவற்றையும் கடந்து நிற்பவள்அம்பிகை. ஒளி பொருந்தியவளாக வர்ணிக்கப்படுகிறாள். சுகத்தை அருள்பவள். அம்பாளை எப்போதும் ஆபரணங்களால் நன்றாக அலங்கரித்து த்தானே காண விரும்புகிறோம். அம்பாளைப் பூஜிக்கும்போது நன்றாக அலங்கரித்துக் கொண்டு பூஜை செய்தால் அம்பாளுக்கு மிகவும் பிடிக்கும். அன்னையை த்யானித்தால் மிக்க சந்தோஷம் கொள்பவள். அவளே எல்லாவற்றுக்கும் முழுமுதல் பொருள். ஞானத்தை அருள்பவள்.

    ReplyDelete
  89. எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் ஏராளமாக உள்ளன சுமார் 100 பக்தர்கள் மட்டுமே அதிகமாகக் கூட்டம் இல்லாத நேரம்.நான் அன்னை ஸ்ரீ மதுரகாளிகண்டு மெய்சிலிர்த்துப்போய் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தேன் எனக்கு மட்டுமல்ல. தரிஸனத்திற்குச் சென்று வந்த எவ்வளவோ பக்தர்களுக்கு அவள் அருளால் எவ்வளவோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. எனக்கு சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் உண்டு. குங்குமப்பிரஸாதம் நன்றாக ஆசீர்வதித்து அனுக்கிரஹம் செய்து கொடுத்தார்கள் சந்நிதானத்திலேயே அருகில் நின்று கவனிக்கும் பாக்யம் பெற்றேன். என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத ஒரு நல்ல பேரின்ப அனுபவம் ஆகும்.

    ReplyDelete
  90. எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் ஏராளமாக உள்ளன சுமார் 100 பக்தர்கள் மட்டுமே அதிகமாகக் கூட்டம் இல்லாத நேரம்.நான் அன்னை ஸ்ரீ மதுரகாளிகண்டு மெய்சிலிர்த்துப்போய் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தேன் எனக்கு மட்டுமல்ல. தரிஸனத்திற்குச் சென்று வந்த எவ்வளவோ பக்தர்களுக்கு அவள் அருளால் எவ்வளவோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. எனக்கு சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் உண்டு. குங்குமப்பிரஸாதம் நன்றாக ஆசீர்வதித்து அனுக்கிரஹம் செய்து கொடுத்தார்கள் சந்நிதானத்திலேயே அருகில் நின்று கவனிக்கும் பாக்யம் பெற்றேன். என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத ஒரு நல்ல பேரின்ப அனுபவம் ஆகும்.

    ReplyDelete
  91. ஸ்ரீ மதுர காளியானவள் பிரதிபலிக்கும் பண்டைய மஹா வித்யாவின் ஞானத்தின் சக்திவாய்ந்த காளி ஸ்வரூபம் அதனால் தான் அம்பாள் ஆதி சங்கரர் முன் தோன்றி அவர் தாகத்தை துடைத்து நமக்காக அவர் மூலம் சிறுவாச்சூரில் எழுந்து அருளி உள்ளாள் சிவ பெருமானால் ஸ்ரீ பரமேஸ்வரி மூலமாக சாருகனை வதம் செய்து ஸ்ரீ மதுர காளி என்ற நாமத்துடன் சிறுவாச்சூரில் அமர்ந்துள்ளாள் ஒரு பக்தனுக்கு முன்பாக அவள் வெளிப்படும் போது எல்லா பயமும் என்றென்றும் இறந்துவிடும். அவள் விலங்குகளின் ராஜாவான சிங்கத்தின் மீது சவாரி செய்கிறாள் அவள் பக்தனை மனித உணர்ச்சியிலிருந்து தெய்வீக உணர்ச்சிக்கு கொண்டு செல்கிறாள் அவள் பக்தர்களின் ஆன்மீக இருதய உலகில் வசிக்கிறாள். அவளுடைய பக்த பாடங்கள் அவளுடைய பக்தனுக்கு அளிக்கும் பரிசுகளிலிருந்து பிரித்தறிய முடியாதவை, ஏனென்றால் அவை அனைத்தும் அருளும் கருணையும் மட்டுமே அவளுடைய தெய்வீக சக்தியும் மகிமையும் மற்ற தெய்வங்களுடன் ஒப்பிடமுடியாது இதை வெளிப்படுத்திய ஒரு பக்தனின் உண்மையான அனுபவம் இது நாமும் அவளை வணங்கும்போது கவனிக்கிறோம்

    ReplyDelete